Thursday 1 March 2012

உறவுகளை சிதைக்கும் இஸ்லாமிய பத்வா!



எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார், இஸ்லாத்தில் சனநாயகம் இல்லை தோழர் என்று. அதற்கு மேல் வேறு எந்த விளக்கமும் கூறியதில்லை.. அவர் எதையோ மனதில் வைத்து வெளிச்சொல்ல இயலாமல் புழுங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் உணரமுடிந்தது.. அவரது பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதனை பல நேரங்களில் சிந்தித்து பார்த்ததுண்டு. பொதுவாக எல்லா மதங்களிலுமே சனநாயகம் கிடையாதுதான். ஆனாலும், இந்து மதத்தின் சாதீய கொடுமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த எனக்கு அத்தகைய நிலை இஸ்லாத்தில் இல்லை என்பதாகவே எண்ணியதுண்டு

      கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மக்கட்டி துராப்ஷா என்பவர் இஸ்லாத்தில் இருந்து விலக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி அவர் என்னுடன் விவாதித்த உரையடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒருநாள், இதைப் படியுங்கள் தோழர் என அவர் கையில் வைத்திருந்த செய்தித்தாளின் கட்டிங் பேப்பர் ஒன்றைக் கொடுத்தார், அதில், கடையநல்லூர் மக்கட்டி துராப்ஷா காபிர்என அறிவிக்கப்பட்டு இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதான செய்தி இடம்பெற்றிருந்தது. அதை முழுவதுமாக படித்துக்கொண்டிருந்த எனக்கு அந்த வரிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடைய மையித்தை அடக்கம் செய்யக்கூடாது

அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது

இவர் இஸ்லாத்தில் இருந்து விலகி விட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முரிந்துவிட்டது.

      மக்கட்டி துராப்ஷா என்பவர் இஸ்லாத்தின் மூடநம்பிக்கைகளை  விமர்சனத்திற்கு உள்ளாக்கியமைக்காகத்தான் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் என்று புரிகிறது.. ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்கும் அதே அளவிலான வன்முறைகள். கூடுதலாக அத்தம்பதிகளுக்கிடையேயான திருமண உறவை முறிக்கும் தண்டனை. இந்த முல்லாகளுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுப்பது யார்? நான் நண்பரை ஏறிட்டு நோக்கினேன்.. அவரது கண்களில் ஒருவித அச்சம் பரவியிருந்தது. அவர் என்னை விலக்கி, விட்டத்தை வெறித்தவாரே தொடர்ந்தார்.

      இஸ்லாத்தில் சனநாயகம் இல்லை என்பது எவ்வளவு உண்மையாயிற்று. இந்த துராப்ஷாவின் நிலையைப் பாருங்கள், ஒன்று அவர் முல்லாக்களிடம் சரணாகதி அடையவேண்டும், இல்லையேல் தனது குடும்ப உறவை முறித்துக்கொள்ள வேண்டும் முக்கியமாக தனது மனைவியை பிரியவேண்டும். இப்போது அவர் இந்த இரண்டில் ஒன்றை விரைவில் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இந்த மணமுறிவு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிணக்கினால் அல்ல, அல்லாவின் பெயரால் இந்த முட்டாள் முல்லாக்கள் தான் முன்னின்று பிரித்துவைக்கின்றனர். இவர்கள் முறித்து வைப்பது விடலைப் பருவ காதலை அல்ல, பல வருட கால வாழ்வின் களிப்பினாலும் அன்பினாலும் உருவான காதலை முறிக்கிறார்கள். ஒரு கணவன் மனைவிக்குமிடையே உள்ள உறவு என்பது உணர்ச்சிப் பண்பாடில்லாத அந்த அல்லாவின் பெயர் கொண்டுதான் பிணைக்கப்பட்டிருக்கிறதா என்ன! இந்த முட்டாள் முல்லாக்களுக்கு காதல் என்பது காமம் என்பதாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது போலும். போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்றா நினைக்கிறார்கள் இவர்கள்! அவ்வடிமைகளுடன் போர் நடந்த அந்த இடங்களிலேயே அப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனரே!. அது யாரால் என்பது இந்த முல்லாக்களுக்கு தெரியாதா என்ன! அப்பொழுது எங்கே போனது இந்த மத உணர்வும், பத்வாக்களும். இதுதானே 1400 வருடகால வரலாறு. இவர்களது வரலாறே இவர்களை பின்னங்கால் பிடரியில் பட ஓடவைக்கிறது. ஆனால், இதை நாம் அம்பலத்துக்கு கொண்டுவரும்போது மட்டும் நம்மீதே பாய்ந்து பிராண்டுகிறார்கள் இந்த முட்டாள் முல்லாக்கள்.

               பிறிதொரு நாளில் இந்த துராப்ஷா இஸ்லாமியராக மாறி விடவும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அப்பொழுதும் கூட இந்த முட்டாள் முல்லாக்கள்தான் இடையில் நிற்பார்கள். விவாகரத்தின் மூலம் இவ்விருவரும் விலக்கப்பட்டுவிட்டால் மீண்டும் இவ்விருவரும் இணைய வேண்டுமானால் அப்பெண்ணானவள் வேறொரு ஆடவனை மணமுடித்து அவருடன் உறவு கொண்ட பிறகு அந்த இரண்டாம் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று அதன் பின்புதான் முதல் கணவரான துராப்ஷாவுடன் இணைய முடியும். இதுதான் இஸ்லாமிய சட்டம். இந்த முட்டாள் தனமான சட்டத்தில் என்ன ஒழுக்கம் இருக்கிறது சொல்லுங்கள். எந்தப் பெண்ணாவது இதை ஏற்றுக்கொள்வாளா?. ஒரு ஆணைப்போல தனது காதலையோ அல்லது காமத்தையோ பலருடன் பகிர்ந்துகொள்வதை எந்த ஒரு பெண்ணும் விரும்புவதில்லை என்பதுதானே உண்மை. 5 மனைவிகளுடனும் ஆத்மார்ந்த காதல் இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பொய். பித்தலாட்டம். இப்படித்தான், நானறிந்த பெண்மணி ஒருவர் தனது கணவரைப் பற்றி ஜமாத்தார் ஒருவரிடம் புகார் செய்ய, அவரோ அப்படியா! அவனுடன் நீ வாழ்வது கூடாதம்மா! அவனை தலாக் செய்துவிடு என கூறியிருக்கிறார். அரண்டு போன அந்த பெண்மனி அத்துடன் அந்த பேச்சையே விட்டுவிட்டார். உங்களுக்குப் புரிகிறது என்றே நினைக்கின்றேன். இந்த முட்டாள்தனமான அருவருக்கத்தக்க சட்டங்களைத்தான் இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள் இந்த முட்டாள் முல்லாக்கள். இந்த முட்டாள் முல்லாக்களின் சட்டதிட்டங்களினால்தான் அநேக முஸ்லீம்கள் வெளிப்படையாக இஸ்லாத்தை விமர்சிப்பதில்லை. உறவுகள் சிதைவுக்குள்ளாகும் என்ற அச்சமும் ஒரு காரணமே. இவ்வாறாக தனிமனித வாழ்வுரிமையில் தலையிடும் இந்த முல்லாக்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும். இவர்களது கொட்டத்தை ஒடுக்கவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் கூட இஸ்லாத்தை பரிந்துரைத்தது என்பதும் எவ்வளவு அபத்தமானது தெரியுமா?

நண்பர் இடைமறித்து, மன்னிக்கவும் தோழர். இந்து மதத்தின் சாபக்கேடான தீண்டாமை என்னும் கொடிய விலங்கிலிருந்து தப்பிக்கவே அவர் அவ்வாறு கூறினார்.

ஆமாம் அதுதான் உண்மை, சரி. தோழர் உங்களது நேரத்தை வீணடித்து விட்டேனோ?

இல்லை. உங்களிடம் இருந்து நான்தான் இஸ்லாம் பற்றி அதிகம் புரிந்து கொண்டேன். நன்றி!விடைபெற்றுச்சென்றார்.

      மதவாதிகள், தங்களது பழைய நைந்துபோன மதங்களை உயிரோட்டமாக வைத்திருக்க அன்றாடம் வெளிவரும் அறிவியல் தகவல்களை ஒவ்வொரு விநாடியும் தவம் கிடந்து பெற்று சுவீகரித்துக் கொள்வதைப்போல, முந்திய சமுதாய மக்களின் கலாச்சாரத்திற்கேற்ப கூறப்பட்ட சட்டதிட்டங்களை, மாறும் சமுதாய வாழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள தயாரில்லை. இது மதங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதால்பத்வாபோன்ற அடக்குமுறைகளை கையாளுகின்றனர். அறிவியல் ஒன்றை மெய்பிக்கும்போது அவர்களுக்கு வேறுவழியில்லை என்றாகிவிடுகிறதல்லவா? எனவே, வார்த்தை விளையாட்டுகளில் இறங்கி தங்களது மதப் புத்தகங்களில் நவீன கால சிந்தனை ஓட்டத்திற்கேற்ப புதுப்புது கருத்துகளை இடைச்செருகிக் கொள்கின்றனர். கடந்தகால அறிவியலின் துணைகொண்டு தவறாக விளக்கமளிக்கப்பட்டதற்காக அந்த  முல்லாக்களுக்கு பத்வா வழங்கப்படுவதில்லை, குறைந்த பட்சமேனும் சமுகத்தில் மன்னிப்பும் கோருவதில்லை. ஆனால், நிகழ்காலத்தில் மதங்களின் பிற்போக்குத்தனங்களை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்தும்போது மட்டும் பத்வாக்கள் உயிர்பெற்று விடுகின்றன. .ஷாபானு வழக்கில் தங்களது மத உரிமைப் பற்றி பேசிய முல்லாக்கள்தான் துராப்ஷாவின் தனிமனித வாழ்வுரிமையில் தலையிட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

      ஏதோ காரணங்கொண்டு செங்கொடி அவர்கள் தனது வலைத்தலத்தை இடைநிறுத்தியிருப்பதை ரியாத்திலிருந்து செங்கொடி தப்பியோட்டம்’ ‘எங்கே செங்கொடிஎன தலைப்பிட்டு அதில் தங்களது மதவெறியைக் கக்கி குதூகலிக்கிறது kadayanallur.org  செங்கொடியின் பதிவுகளுக்கு பதில் கொடுக்க முடியாத தங்களது கையறு நிலைகண்டு ஆத்திரம் கொள்கிறது, செங்கொடியை நோக்கி வன்மம் கொப்புளிக்க கேலி பேசுகிறது kadayanallur.org நாளை உலகம் முழுதும் இஸ்லாமியமயமாக இருந்தால் இவர்களின் மதவெறி எப்படியிருக்கும் என்பதனை இந்த தளத்தின் kadayanallur.org யின் எழுத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

      இந்த முல்லாக்களின் அடாவடித்தனங்களை ஒடுக்க, உலகுக்கே ஜனநாயகம் வழங்கியதாகக் கூறியபழைய ஜனநாயகவாதிகள்விரும்புவதில்லை, மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் எனக் கருதும்புதிய ஜனநாயகவாதிகளால்தான் இந்த முல்லாக்களின் கொட்டத்தை அடக்க இயலும்.

வசீகரன்.

Facebook Comments

20 கருத்துரைகள்:

Anonymous said...

பெரியார் இந்த விஷயத்தில் ஒரு பெரிய முட்டாள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்து மத கொடுமைகளை இன்றில்லையேல் என்றேனும் கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்க முடியும். சாதீய அரசியலே - வன்கொடுமைகளை நீர்த்து போகாமல் வைத்திருக்கிறது. ஆனால் முஸ்லீம் மத அடிப்படைவாத சக்திகளை அப்படி ஒடுக்க முடியுமா? காலம் தான் விடை தர வேண்டும்.

Anonymous said...

இஸ்லாமியக் காட்டுமிராண்டித்தனம் தமிழகத்தை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில் (வஹாபி அல்லாத) இஸ்லாமியர்களும் இஸ்லாமியர் அல்லாதவர்களும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம். வஹாபிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை மட்டுமல்லாது தங்களுடன் ஒத்து வராத இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க தயங்குவதில்லை.

Anonymous said...

மக்கட்டி துராப்ஷா இப்போது தொழப்போகிறானாமே. இந்த அயோக்கிய நாய்களுக்கு கொள்கை உறுதி கிடையாது என்பது உண்மைதான். இந்த இறையில்லா இஸ்லாம் இவனும் மாட்டிக்கொண்டால் இப்படித்தான் செய்வான். அயோக்கியப் பயல்கள். நேரில் வர திராணியற்றவர்கள்.

Nanjil said...

நேரில் வந்தால் பத்வா போட்டு கழுத்தை ஹலால் பண்ணிருவியளே!

Anonymous said...

முட்டாள் மடையர்களே உங்கள் உயிருக்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தைரியம் இருந்தால் நேருக்கு நேராக வந்து உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேளுங்கள். கேவலப்பட்ட நாத்திக, கம்யூனிசத்தின் கொடுங்கோன்மை, குரோதம் இஸ்லாத்தில் துளியளவும் கிடையாது. தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள். நிரூபித்துக் காட்டுகிறோம்.

Anonymous said...

//முட்டாள் மடையர்களே உங்கள் உயிருக்கு எங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. //
பயங்கரவாதிகள் சொல்வதை முட்டாளும் மடையனும்தான் நம்புவான்.

Anonymous said...

yaarai pathu bayagara vaathi yennkirai? Ungalai pol nari vesam podubavargal aalla islamiyargal... thiruttu seybavan maati kollum varai thaa uthama puthiran... maatiya pinbu ha ha... athai nilamai thaa unnakum...

Nasar said...

// இந்த முல்லாக்களின் அடாவடித்தனங்களை ஒடுக்க, உலகுக்கே ஜனநாயகம்வழங்கியதாகக் கூறிய ‘பழைய ஜனநாயகவாதிகள்’ விரும்புவதில்லை, மதம் என்பதுஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் எனக் கருதும் ‘புதிய ஜனநாயகவாதிகளால்’தான் இந்த முல்லாக்களின் கொட்டத்தை அடக்க இயலும்.//
இத் தோடா ‘பழைய ஜனநாயகவாதிகள்’ துண்டக் காணோம் துணியக் காணோம் நு ஓடிய வரலாறு இந்த புதிய ஜனநாயகவாதிகளுக்கு தெரியாது போலும் பாவம் குழந்த பசங்க ...

Anonymous said...

செங்கொடி நாயி தமிழ்நாட்டுல தான இருக்கான். அதுவும் கி....டி என்ற ஊரில் தானே இருக்கிறான். தைரியம் இருந்தால் நேரில் விவாதத்திற்கு வரட்டுமே. முடிந்தால் தன்னுடைய சொறிநாய்கள் மகஇக அனைவரையும் அழைத்துக் கொண்டு வரட்டுமே. பிஜே தன்னுடைய இணையதளத்தில் பகிரங்கமாக சவால் விட்டுள்ளாரே. ஊருக்கு வந்தால் பிஜேயை விவாதக் களத்தில் சந்திப்பேன் என்றானே அந்த நாய் . அவனை எங்கடா ஒளிஞ்சிருக்கான். அயோக்கியப் பயல்

RAJA said...

அனானி,
நீயே உன் பெயரைப் போட்டுக்கொள்ளாமல் கமெண்ட் கொடுக்கிறாய். இஸ்லாம் பற்றி தெரிந்திருப்பதால் உயிருக்கு பயந்து நேரடி விவாதத்திற்குவர எவரும் தயாராக இல்லை. நேரடி விவாதத்தில் பேசக்கூடியவற்றை இங்கேயே கூறலாமே. அதில் என்ன கஷ்டம். பிஜே விவாதத்திற்கு அழைக்கிறார். முன்னாள் முஸ்லிம் அலிசினா அவர்களும் விவாதத்திற்கு அழைக்கிறார். பிஜேயை அவரிடம் விவாதம் செய்ய சொல்லுங்கள். ஜெயிததுவிட்டால் 50 ஆயிரம் டாலர் பிஜேவுக்கு கிடைக்கும்.

Anonymous said...

ஏண்டா உங்களுக்கு மூளை என்பதே கிடையாதா? அலிசினா என்பவன் பிஜே யை அழைத்தானா? அவன் யாருடா? எப்பண்டா பீ ஜே யை அழைத்தான். செங்கொடி என்பவன்தானடா நான் ஊருக்கு வந்தால் பிஜேயுடன் விவாதம் செய்வேன் என்று தன்னுடைய தளத்தில் எழுதினான். இப்ப எதுக்குடா ஓடி ஒளியுறான். உங்க மகஇக வின் இந்துத்துவம் விரைவில் வெளிப்படும்.

Anonymous said...

மூதேவிகளா நீ ராஜா ன்னு உன் பெயரைப் போட்டுள்ளாய். நீ எந்த ராஜா உன் ஊரு எது? எந்த அட்ரஸின் வசிக்கிறாய்? என்பதையெல்லாம் வெளியிட உனக்கு திராணி இருக்காடா?

moses said...

http://www.google.co.in/url?sa=t&rct=j&q=+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE+&source=web&cd=1&ved=0CCMQFjAA&url=http%3A%2F%2Ftamil.alisina.org%2F&ei=RvNlT9qQL8f3rQenh7W9Bw&usg=AFQjCNGRTp5HSaSyPmUNZU1FKj3HAZbcKQ
அலிசினா கட்டுரைகள் தமிழிலேயே இணையத்திலேயே உள்ளது. இங்கு ஒரு நண்பர் சேமித்துள்ளார்.
http://newindian.activeboard.com/f549401/forum-549401/
அனைத்து முஸ்லீம்களையும் விவாத்த்திற்கு அழைக்கிறார். வேற்றி பெற்றால் 25 லட்சம் பெறலாம்.

http://www.faithfreedom.org/challenge.htm
ஜேம்ஸ் ராண்டியின் போட்டியில் பரிசு 5 கோடி
http://www.randi.org/site/index.php/1m-challenge.html

Anonymous said...

எதுக்கு? முகம்மது பாணியில போட்டுத்தள்ளறதுக்கா?

Anonymous said...

நாத்திக போர்வையில் இந்துத்துவ வெறியர்கள்தான் உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மகஇக என்பதும் இந்துத்துவ வெறியர்களின் கூடாரம்தான். புண்டையையும், சுன்னியையும், எருமையையும், யானையும், கல்லையும், கண்டதையும் வணங்கும் கூட்டம் உண்மையை ஒருகாலத்திலும் சிந்திக்காது. பொய்யையே திரும்பத் திரும்ப கூறும்.

நந்தன் said...

## புண்டையையும், சுன்னியையும், எருமையையும், யானையும், கல்லையும், கண்டதையும் வணங்கும் கூட்டம் உண்மையை ஒருகாலத்திலும் சிந்திக்காது. பொய்யையே திரும்பத் திரும்ப கூறும்.##
ஆர்எஸ்எஸ் -ஐவிட மதவெறிபுடிச்ச நாயகள் இசுலாமியர்கள் என்பது இந்த பின்னூட்டத்திலிருதே தெரிகிறது.

RAJA said...

அனானி
உன் பெயரையும் விலாசத்தையும் போட்டுவிட்டு என்னைக் கேள். உன்னைப் பற்றிய விபரங்களை வெளியிட தைரியம் இல்லை. என்னைக் கேட்கிறாய். தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான ராஜா என்ற பெயர் உள்ளவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதாவது ஊருக்குத்தான் ராஜாவாக இருக்க வேண்டுமா?

அலி சினா அவருடைய வெப்சைட்டில் முஸ்லீம்களை விவாதத்திற்கு அழைக்கிறார். பிஜே அவர் வெப்சைட்டில் அழைப்பது போல. ஆனால் உங்கள் கூட்டத்தைப் போல நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார். உங்கள் கூட்டத்திற்கு மூளை கம்மி என்பதை உங்கள் பின்னூட்டங்களே காட்டுகிறதே

Anonymous said...

நல்ல பதிவு சகோ. மேலும் எழுதுங்கள். கூகிள் நண்பர் பட்டியை இணைக்கலாமே !

Dr.Anburaj said...

இந்து மதத்தின் சாதீய கொடுமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த எனக்கு அத்தகைய நிலை இஸ்லாத்தில் இல்லை என்பதாகவே எண்ணியதுண்டு.

இது தவறு. இந்து மதத்தில் தீண்டாமை சாதி கொடுமைகளை எதிா்த்து வரலாறு முழுவதும் பொியக்கங்கள் ஏற்பட்டு சமூகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வந்து புதிய சாதிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றதை நிறைய போ் அறியவில்லை. சாதிகளற்ற வேத கால சமூகம் தான் இனறைய சாதிவாாி சமூகங்கள். சாதி மனிதனின் அல்ப புத்தியில் சுயுநலனில் உள்ளது. எதிா்த்து போராடியவா்கள் போராடிக் கொண்டிருப்பவா்களை யாரும் கொல்லவில்லை. அவர்களின் பயணம் தொடா்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்தியாவில் சமூக கலாச்சார சமய பாிணாமம் தொடா்ந்து கொண்டேயிருக்கின்றது. மக்கள் நினைத்தால் இன்னும் துாிதப்படுத்த முடியும்.

Dr.Anburaj said...

அரேபியாவில் இசுலாத்தில் சமய சமூக ...... பாிணாமங்கள் வளரவிடாமல் ஒரு தேக்க நிலை ராணுவ நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் அங்குள்ள பல பிரச்சனைகளுக்கு காரணம். முகம்மதுவிற்குள் உலகம் இருக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம்.முகம்மதுவின் கருத்துக்கு உலகம் முரண்படக் கூடாது என்பது பைத்தியக்காரத்தனம் என்பதை அவர்கள் உணரவில்லை.