Tuesday 29 May 2012

முஸ்லீம்களின் சுயரூபம் அறிந்த பிறகு – தந்தை பெரியார் எழுதிய கட்டுரை.



 பொதுவாக தந்தை பெரியார் "முஸ்லீம்களுக்கு ஆதரவானவராகவே" சொல்லப்படுகிறார். ஆனால் அது எந்தளவு உண்மை என்பதையும் பகுத்தறிய வேண்டி உள்ளது. முஸ்லீம்கள் "இஸ்லாத்துக்கு ஆதரவானவர் பெரியார்" என்று சொன்னால் - தந்தை பெரியாரை முழுமையாக அறிந்தவர்கள், பெரியாரை ஆய்வு செய்பவர்கள் "அது தவறு. பெரியார் முஸ்லீம்கள் குறித்தும் இப்படியும் பதிவு செய்திருக்கிறார்" என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இது ஒரு பெரிய மோசடி இல்லையா? விடுதலையில் வந்த தலையங்கத்தையே மறைக்கிறார்கள் என்றால்? உண்மை உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில், முஸ்லீம்களின் சுயரூபம் அறிந்த பிறகு தந்தை பெரியார் எழுதிய கட்டுரை. 6.3.1962 அன்று விடுதலையில் எழுதிய தலையங்கத்தை இங்கே தந்துள்ளேன். தந்தை பெரியார் பார்வையில் முஸ்லீம்களுக்கும், பார்ப்பணியத்துக்கும் மிக பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இத் தலையங்கத்தின்மூலம் அறிந்து கொள்ளலாம்.

கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் என்பதில் உறுதியாக இருந்தவர் தந்தைபெரியார். அதனால்தான் டாக்டர் அம்பேத்கார் போல் தந்தைபெரியார் மதம் மாறவில்லை. நாத்திகராகவே வாழ்ந்து மறைந்தார்.
      மதமின்றி வாழ முடியாது என்று கருதினால் இசுலாமிய மத த்திற்கு போகும்படி மக்களிடம் பெரியார் பிரச்சாரம் செய்த தாக இசுலாமியர்கள் கூறித் திரிகின்றனர். அதாவது இசுலாமியர்கள்தான் நேர்மையானவர்கள் என்று பெரியார் கருத்துக் கொண்டிருந்த தாகவும், அவர் இசுலாந்தினைப்பற்றி முழுமையாக அறிந்திருந்தால் அதாவது குர்ஆனை (நேர்மையாக) படித்திருந்தால் இசுலாத்திற்கு ஓடி வந்திருப்பார் என்றும் பசப்பித்திரிகின்றனர்.
      
           மதம் வேண்டும் என்றால் இசுலாத்திற்கு போ என்பதுகூட இசுலாமியர்களைப்பற்றி சரிவர தெரிந்திராத காலக்கட்டங்களில் கூறியிருக்கலாம். ஆனால், நாழ்த்தப்பட்ட மக்களுடனான இசுலாமியர்களின் நவஞ்சக நடவடிக்கைகளை அனுபவம் உணர்த்திட ‘விடுதலையில்எழுதிவிட்டார்.

விடுதலையின் தலையங்கம்:

நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ- இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும். இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியாலும் காங்கிரசாலும் மற்றும் அவர்களுக்கு நீதி அல்லது தனிச் சலுகைகள் இன்றுள்ள ஆட்சியும் காட்டி வந்த காரணத்தினாலும் மேலும் அவர்களது செல்வாக்கு காரணமாய் புத்திசாலித்தனமான திறமையான தகுதி உள்ள சமூதாயம் என்று கருதி ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும், நாடு வளர்ச்சி அடையாமலும் மெஜாரிட்டி (நாட்டின் இயற்கையான பெருவாரி ) மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். இந்தத் தமிழ்நாடு இன்றும் சுதந்திரமற்ற அடிமை நாடு என்பது எனது பலமான கருத்து. இதை இந்நாட்டுப் பெருவாரி (மெஜாரிட்டி) சமூதாயம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். காரணம் தமிழனுக்கு சுதந்திரம் என்பது என்ன என்றே தெரியாது. ஏன் என்றால் தமிழன் பல பிரிவினனாக ஆக்கப்பட்டவன் ஆனதால் எதையும் கொடுத்து, என்னமும் செய்து பயனடைந்து வந்தவன், இந்தத் தன்மைக்கு ஏதாவது ஒரு மாறுதல் தோன்றிற்று என்று சொல்ல வேண்டுமானால் 1900- ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதுபற்றி சிந்திக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு சுதந்திரம் ஒருநாளும் இருந்ததில்லை. அவன் சரித்திரமே அடிமைத்தனத்திலும் இழி தன்மையிலும் இருந்தே தான் துவக்கப்பட்டிருக்கிறது. அது எப்படியோ போகட்டும். இனிமேலாகினும் தமிழன் தமிழ்நாடு சுதந்திரத்துடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டாமா? என்பது தான் இனி சிந்திக்க வேண்டியதாகும். இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிக்கால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது சுதந்திர உதய நாள் முதல் எனது கருத்து.

இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்த வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமே போதுமானதாகும். அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாயமாகிய தமிழனின் பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான பொதுத் தொண்டு செய்கிறார்கள். இப்படி இன்னும் பல இருக்கின்றன. 100-க்கு 3- விகிதமுள்ள பார்ப்பன மக்களும் அவர்கள் பெண்கள் பொதுநலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வு வாழ்கிறார்கள். அதுபோலவே 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுமைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.

      இதே போன்ற நிலையிலே தான் இந்நாட்டு தமிழ் ஆண்கள், பெண்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் வேலைக்காரிகளாக இருக்கிறார்கள். முதலாவது இந்த இரண்டு தர மக்கள் நிலையும் இந்நாட்டுத் தமிழனுக்கு எவ்வளவு இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது அவர்கள் மத தருமம்! மத ஆச்சாரம்! என்றால் யார் நாட்டில், யார் மத்தியில், யாருடைய மத தர்மம், யாருடைய மத ஆச்சாரம், யாரை இந்த நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம் சுயமரியாதை அளவு விளங்கும்.

     ஜோசியத்தில் வல்லவரான ஒரு மேதாவியானவன் (அமாவாசையில் பிறந்தவன் திருடுவான் என்பது ஜோசியமானால்) தன் வீட்டில் திருடின அமாவாசையில் பிறந்தவரை மன்னித்து விடுவாரா? இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் பச்சைத் துரோகம்என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூமத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.

       இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.



.சமத்துவன்




Saturday 26 May 2012

அற்புதக் கதைகள்-2 -மூடநம்பிக்கையில் முன்னணியில் நிற்பது கல்லா? மரமா?

       செப்டம்பர் 21, 1995-ல் விநாயகர் சிலைகள் பால்குடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அன்று குழந்தைகளுக்கு அருந்த பால் கிடைக்காமல் செய்தன. கடந்த 2010-ல் கேரளாவிலுள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த, flex-Print செய்யப்பட்ட, குழந்தை ஏசுவைக் அணத்துக்கொண்டிருக்கும் மேரியின் படத்திலிருந்து கண்களில் நீர்வழிவதாகக் கூறி கிருஸ்துவர்கள் பரபரப்பை ஏற்படுத்தினர். மதநம்பிக்கையாளர்களிடையே தினமும் இதுபோன்று ஏதாவது ஒரு அற்புதக் கதைகள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவைகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகும் பொழுதெல்லாம் மாற்று நம்பிக்கையிலிருப்பவர்கள் மறுப்பதும், எள்ளிநகையாடுவதும் வாடிக்கையானது.
       உண்மையைச் சொல்வதென்றால் குறிப்பிட்ட மதங்களைச் சார்ந்த அனைவருமே இத்தகைய செய்திகளை நம்புவதில்லை. அவர்களில் வெகுசிலர் பகுத்தறிவுடன் இவைகளை அணுகுகின்றனர். இதைப்போன்ற பிறமத நம்பிக்கைகளிலிருந்து வெளியேறியவர்களை இஸ்லாமியர்கள் மிகவும் விரும்புவார்கள் (இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து வெளியேறியவர்களையல்ல) அத்தகையவர்களை காணும்பொழுது அவர்களது மனம் தாவா (Dawa-அழைப்பு) செய்வதற்காகத் தாவிக் குதிக்கும்.
       அழைப்புப் பணி, இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று பீற்றிக்கொள்வதோடு, இதைப் போன்ற மூடக்கதைகளுக்கு இஸ்லாமில் துளியும் இடமில்லை என்று துவங்கும். பொதுவாகச் சொல்வதென்றால், இஸ்லாமியர்களின் ‘தாவா பணி, இத்தகைய பகுத்தறிவு வாதங்களுடன்தான் ஆரம்பமாகின்றன. தாவா செய்பவர்களை தாயீ’(Dayee) என்பார்கள். தாயீக்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளெல்லம் உண்டு. இஸ்லாம் மட்டுமே சரியாதென்று நம்பவைக்கப்பட்ட நானும், என் நண்பர்கள் பலரிடம் ‘தாவாசெய்திருக்கிறேன். ஏர்வாடி, நாகூர் போன்ற கல்லறைகளைச் சுற்றி பின்னப்பட்ட கதைகள் பதிலாகக் கிடைக்கும். அதற்கு, இஸ்லாமிற்கும் தர்காக்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று ஒரே அடி, அவ்வளவுதான் முடிந்ததுகதை. அவர்களுக்குப் பேசுவதற்கு இடமிருக்காது அதன் பிறகு மைதானம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
இஸ்லாமிற்கும் மூடத்தனத்திற்கும் சம்பந்தமில்லையா? இஸ்லாமிய போதனைகள் பகுத்தறிவு நிறைந்தவைகளா?
       கடந்த பகுதியில் நிவைப்பிளந்த கதையைக் கூறிய பிறகும் இப்படியொரு கேள்வி பொருளற்றதுதான். ஆனாலும் அதன் தொடர்ச்சியாக, முஹம்மதின் மூடத்தனமான செயல்கள், போதனைகள் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
       ஓஷோவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அவர் சற்று அல்ல மிகவுமே விநோதமான ஆசாமி. அவர் தன்னைபற்றிக் கூறும்பொழுது, அவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்திலிருந்த பிற ஆசிரியர்களுடன் பழகியதைவிட, அங்கிருந்த ஒரு குல்மோஹர் (Gulmohar) மரத்திடம் பழகியதுதான் அதிகம் என்கிறார். அவர், அதற்கு வணக்கம் சொல்வது, பேசுவது, கட்டித் தழுவுவது என்றிருந்திருக்கிறார். பிறரையும் அவ்வாறு செய்யுமாறு கூறியதால் பைத்தியக்காரப் பட்டம் பெற்றதாகவும் கூறுகிறார். அவரது பிரிவிற்குப் பிறகு அம்மரம் பட்டுப்போனதாக அறிந்தவுடன் மீண்டும் வந்து கட்டித்தழுவிய பொழுது இறந்த அம்மரத்திலிருந்து நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக கூறிக்கொண்டார்.

இது பரவாயில்லை பின்வரும் ஹதீஸைப்பாருங்கள்,
அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, மரம் பேசுவதோடுமட்டுமல்லாமல், ஜின்களைப்பற்றி முஹம்மதிடம் உளவுப் பணியையும் செய்திருக்கின்றன. ஜின்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கே பதிலில்லை. இந்த லட்சணத்தில் ஜின்களைப் பார்த்து உளவு சொன்ன மரத்தைப்பற்றி கேட்டால் என்ன சொல்வது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

தனது பிரிவினால் பட்டுப்போனதாக ஓஷோ கூறியது உயிருள்ள மரத்தைதான். இங்கு பாருங்கள், முஹம்மதின் பிரிவைத் தாங்கமுடியாமல் வெட்டப்பட்ட பேரிச்சமரத்தின் அடிமரக்கட்டை அழுகிறது. அது ஓலமிட்டதை அவர்களது தோழர்களும் கேட்டிருக்கின்றனர்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உரையாற்றும் போது) நின்றுகொள்வதற்காக (ஆரம்பத்தில்) பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்றிருந்தது. நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து வைக்கப்பட்ட போது அந்தக் கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியேற்றோம். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (மிம்பரிலிருந்து) இறங்கி (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தமது கையை வைத்தார்கள். (அதுவரையில் அந்தச் சப்தம் வந்து கொண்டேயிருந்தது.)
(புகாரி)
முஹம்மது வந்து கைவைத்து சமாதானம் செய்யும்வரை ஓலமிட்டுள்ளது. ஓஷோ செய்தது பைத்தியக்காரத்தனமா? இதைத்தான் அல்லாஹ், சிந்திக்கமாட்டீர்களா, சிந்திக்கமாட்டீர்களா  என்று பலமுறை கெஞ்சாதகுறையாக கேட்கிறான். இது இந்த மடையர்களுக்கு எங்கே புரியப்போகிறது?
நம்ம ஓஷோ, தான் விரும்பிய உயிருள்ள மரத்திற்கு வணக்கம் சொன்னதாகக் கூறினார். ஆனால், உயிரற்ற ஒரு கல் முஹம்மதிற்கு “அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)என்று கூறி வந்துள்ளது. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
(முஸ்லீம்)

                என்ன அறிவுகெட்டத்தனமாக இருக்கிறது கல் எங்காவது பேசுமா? என்று நினைத்தாலே உங்களது ஈமாந்தாரித்தனம் கோவிந்தாதான். இஸ்லாம் மதமல்ல மார்க்கம். இது பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம்.  (என்ன?   உங்களுக்கு ஹூருலீன்கள் வேண்டுமா? வேண்டாமா? கண்ணை மூடிக்கொண்டு நம்பினால்தான் ஹூருலீன்கள் என்ற அழகிய கன்னிகைகள் கிடைக்கும்.)
                நாளை மறுமையில்(?) கஅபாவிலுள்ள அஸ்வத் கல், பார்ப்பதற்கு இரண்டு கண்களுடனும், சாட்சி கூறி பேசுவதற்கு ஒரு நாவுடனும் வரும் என்கிறது இப்ன் மாஜாவிலுள்ள ஹதீஸ். ஆனால் இந்த முட்டாள் உமருக்கு இது புரியாமல், அஸ்வத்தை வெறும் கல் என்று உளறினாலும், போனால் போகிறதென்று ஒரு முத்தமிட்டு சமாளித்து, முஹம்மதின் மரபைக் காப்பாறிவிட்டார். இன்றும் இந்த மரபு தொடர்கிறது. அது வெறும் கல்தான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், எங்களுக்கா பகுத்தறிவில்லை? என்று கேட்டவாறு, கல்லை முத்தமிடுகின்றேன் என்று பாய்கின்ற பேர்வழிகளெல்லாம் மூக்கு, உதடு கிழிந்து தொங்கியவாறு வெளியில் வருகின்றனர். முத்தப் போராட்டத்தில் மரணங்களும் நிகழ்ந்துவிடுகிறது. ஆனாலும் விடுவதாகயில்லை. நெரிசலில் சிக்கி, பிதுங்கி மரணத்தருவாயிலும், கல்லை வணங்குகிறான், கட்டையை வணங்குகிறான் என்று மற்றவர்களை ஏளனம் செய்வதை மட்டும் கைவிடுவதாகயில்லை. ஏனெனில் இது மதமல்ல மார்க்கம்!
                மரம் பேசுகிறது, அழுகிறது, கல் முகமன் கூறுகிறது இவைகளெல்லாம் அறிவியல் பூர்வமானாதாகவும், பகுத்தறிவிற்கு ஏற்புடையதாகவும் இருக்கும் பொழுது, விநாயகர் பால் மட்டுமல்ல, பட்டை சாராயம் குடித்ததாகக் கூறினாலும், மேரி கண்ணில் நீர் வழிந்ததாகவோ, பீர் வழிந்ததாகவோ கூறனாலும் நம்பித்தொலைத்து விடுங்கள்!
நினைவில் கொள்ளுங்கள் இஸ்லாம் மதமல்ல மார்க்கம்!

தஜ்ஜால்

Wednesday 23 May 2012

ஹலாலாகும் ஹராம்கள்...


இந்த நவின உலகில்,உலகத்தையே தன் கையில் அடக்கி கொண்டு முகநூல் மூலமாக பல ஆயிரம் மையில்கள் தொலைவில் உள்ளவனை பத்தே வினாடிகளில் தொடர்பு கொள்ள கூடிய அளவில் விஞ்ஞானம் வளர்ந்து வருக்கின்ற இத்தருனத்தில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு உருப்பெற்ற புனித(?) குரான் தான் மனிதனின் எக்காலத்துக்கும் பொருந்தும் எனவும் அதுவே உலகத்துக்கு வழிக்காட்டும் மறை என ஆட்டம்போடும் இஸ்சுலாமியர்களின் கருத்துக்கள்,இப்பொழுது இஸ்சுலாமியர்களாலே நடைமுறைபடுத்த முடியாமல் தவுடுபொடியாக்கபடுகின்றது. இது தான் இன்று இஸ்சுலாம் இவ்வுலகில் தோற்கடிக்கபடுகின்றது என்பதற்கான ஒரு அத்தாட்சி..

எக்காலத்திற்கும் பொருந்தும் குரான் முஹம்மது இறந்த பின்னே தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பது தான் வரலாறு (காலிபாக்கள்குள் ஏற்ப்பட்ட சண்டை). இருந்தாலும் இந்த காலகட்டத்தில் அது எப்படி எல்லாம் தோற்கடிக்கபடுகின்றது என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுக்கையை வாசகர்களுக்கு சமர்ப்பித்துள்ளோம்.
   எந்த ஒரு தத்துவம் அது நடைமுரையில்  பின்பற்றப்படவில்லையோ அல்லது பின்பற்றமுடியவில்லையோ அத்தத்துவம் எல்லாம் தோற்கடிக்கப்படுகின்ற தத்துவங்களே என்று இஸ்மியர்கள் அதிகமாக கூறி கூப்பாடு போடுவதை அறிந்து கொள்ளுங்கள்.இப்பொழுது இடுக்கைகு செல்வோம்.

ஹலால் என்றால் என்ன?
  குரான் அனுமதித்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது செய்தாரோ () செய்ய சொன்னாரோ அவை எல்லாம் ஹலாலாக கருதப்படும்
ஹராம் என்றால் என்ன?
  குரான் தடுத்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது  செய்யவில்லையோ () செய்ய சொல்லவில்லையோ அவை எல்லாம் ஹரமாக கருதப்படும்.

முக்கிய குறிப்பு
 எவர் எல்லாம் குரானின் போதனையும் முஹம்மதுவின் நடைமுறையின்படி நடக்கவில்லையோ அவர் எல்லாம் சொர்கம் செல்ல மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் காஃபிர் என கருதப்படுவர்.[ ஹராமான பொருளை சாப்பிடுபவன் சொர்கம் செல்ல மாட்டான். அண்ணன் பி.ஜெ]
முஸ்லிம்களால் மீறப்படும் முக்கிய ஹராம்களை பற்றி  பார்ப்போம்.

1. உருவபடம் ஒழித்தல்

'உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானாவன். எப்படி அவனை நான் காணமுடியும்?' என விடையளித்தார்கள் என்று அபுதர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.இந்த ஹதிஸ் முஸ்லிம்யில் இடம்பெற்றுள்ளது.
                                                                                                                    onlinepj.com/books/
(அண்ணன் பிஜே அல்லாவுக்கு உருவம் உண்டு என்று கூறிவறுவது தனிக்கதை)
ஆகவே இவ்வுலகத்தை படைத்தவன் ஒரே இறைவன். அவனே ஏகஇறைவன் அவனுக்கு உருவமே கிடையாது (ஏன் அவள்(பெண்) படைத்து இருக்க கூடாத என்று எல்லாம் கேட்க கூடாது) என்று ஹதீஸ்கள் கூறுகின்றது. அதனால்தான் முஹம்மதுவும் உருவப்படங்களுக்கு எதிரியாக இருந்தார். முஹம்மது எங்கேயும் குரூப்போட்டோ எடுத்ததாக குரானிலோ ஹதிஸ்சிலோ குறிப்பிடபடவில்லை.அதனால் தான் முஹம்மதுக்கு முன்னாடி வாழ்ந்த இயேசுவின் {ஈசா நபி} உருவபடம் கணிக்கப்பட்டுவிட்டாலும் முஹம்மதுவின் உருவபடம் கணிக்கப்படவில்லை. இதுவே முஸ்லீம்களுக்கு உருவபடம் ஹராம் என்பதற்க்கான ஒரு முக்கிய அத்தாட்சி. சரி உருவபடம் ஹராமனதுக்கு காரணம் என்ன என யோசிகின்றீர்களா?  உருவப்படத்தை முஹம்மது அனுமதித்தால் பிற்காலத்தில் அவை உருவ வழிப்பாடுக்கு வழிவகுக்குமாம், அது அவரின் ஏக இறைக்கொள்கைளுக்கு விரோதமாக அமையுமாம் அதனால் தான் உருவபடத்தை தடை செய்தார் என பல மூஃமீன்கள் சொல்லுகின்றார்கள். எது எப்படியோ போகட்டும் ஆக மொத்தம் உருவப்படம் ஹராம் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஆனால் சுவணத்துக்கு பை-பாஸ் ரோடு போடும் பி.ஜெ அண்ணன், ஜாகிர் நாயக், ஜவாருல்லா காதர் மொய்தீன் இன்னும் என்னற்ற மூஃமீன் தலைவர்களின் உருவபடம் மட்டும் சுவர் எங்கும், இனையதளம் எங்கும் பயனித்து கொண்டு இருக்கின்றதே, இவர்களுக்கு இவை எல்லாம் ஹராமாக தெரியவில்லையா? ஏன் இவர்கள் போடும் 10ரூபாய் சி.டியில் கூட இவர்கள் படம் இல்லாமல் வருவதுயில்லை. இவர்கள் தான் நபி வழியை பின்பற்றுபவர்களா? முஹம்மதுவின் போட்டோவை கார்ட்டூனாக போட்டாலே கோவப்பட்டு பத்வா கொடுக்கும் நம் மூஃமீன்கள் இவர்களை ஏன் கண்டுக்கொள்வதில்லை? ... ஒட்டுமொத்த இசுலாமியர்களுக்கும் இவர்கள் தான் அதாரிட்டியோ ! அதனால் அவர்களை பிறர் கேளவி கேட்க முடியாதுதானே.

புகாரி 7042. (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
சரி இது ஒருபுறம் இருக்கட்டும், ஹராமான உருவப்படத்தை பொதித்த ரூபாய் நோட்டுக்காக நாம் எவ்வளவு சண்டையிடவேண்டியிருக்கின்றது. இதில் அந்த ஹராமான உருவபடத்தை பாக்கெட்டுகுள்ளே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கின்றோமே! அதை என்னவென்று சொல்லுவது? இந்திய போன்ற பல மதங்கள் கொண்ட நாட்டில் ரூபாய் நோட்டில் காந்தியின் உருவப்படம் போட்டு இருக்கின்றதே! காபிர்கள் நாட்டில் வேறு வழியே இல்லை பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதால் நம் மூஃமீன்கள் பயன்படுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கூட சப்புக்கட்டிக்கொள்வோம். ஆனால் இஸ்லாத்தை தூக்கிபிடிக்கும் மற்றும் இஸ்லாம் பிறந்த நாடுகளின் ரூபாய் நோட்டுகளில் கூட உருவப்படம் இல்லாமல் அச்சடிக்கப்படுவதுயில்லை ஏன்?. பீயூர் முஸ்லீம் (pure muslim) என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான்கள் ஆட்சியாண்ட ஆப்கானிஸ்த்தானில் கூட உருவப்பட ரூபாய் நோட்டுக்கள் தான் பயன்படுத்தபடுகின்றது. ஏன் இவர்கள் கூட ஹராமான உருவபடத்தை ஹலாலாக்க முயற்சிக்கின்றார்கள்?.







 2.பிரியானி
      இந்த பகுதியை எழுதுவதற்கு பகடு இப்னு சாகிரின், முஸ்லீம்கள் உண்ணும் ஹராமான உணவுகள் என்ற இடுக்கையே மிக உதவியாக இருந்தது. ஆகவே இப்பகுதிக்கு வரும் எல்லாம் புகழும் இப்னு சாகிருக்கே!!!

      உச்சா,கக்கா போவுரதுக்கு கூட நபி வழி தேடும் நம் மூஃமீன்களில் ஒருவர் அண்ணன் பி.ஜெவிடம் சிறிது அளவு ஆல்காஹல் கலந்த மவுத் வாஷ்சரை பயன்படுத்தலாமா என்று ஒரு கேள்வியை கேட்டு உள்ளார். அதற்கு நம் விஞ்சானி பி.ஜெ அளித்த பதில்,

      'ஆல்காஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தாக் கூடாது. ஆல்காஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்காஹால் சிறிதளவேனும் தங்கிவிடும்.  இது எச்சிலின் வழியாகவோ நாம் உண்ணும் உணவின் வழியாகவோ வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே உண்ணுவதற்கு தடை செய்யப்பட்ட இது போன்ற பொருட்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பதும் சுவைப்பதும் கூடாது.
                                                13/05/2011 -onlinepj.com
      'அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'. என்று முஹம்மது அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர்(ரலி).
                                                நூர்திர்மதி 1788,நஸபி 5513
ஆக சிறிது அளவு போதை தரும் பொருட்கள் கூட ஹராமாகும்.ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் போதை பொருள் என தடை செய்யப்பட்ட கசகசாவை(ஒப்பியம் செடியின் விதை)கொண்டு தான் இன்று நம் மூஃமீன்கள் ருசிகரமான பிரியானியை சமைத்து கொண்டு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஹராமான பிரியானியை தான் நல்ல நாள் பெருநாளில் கூட நம் மூஃமீன்கள் சாப்பிடவேண்டியிருக்கின்றது. இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் நம் மூஃமீன்கள் நடத்தும் ஓட்டல்களில் 'ஹாலால் பிரியானி' கிடைக்கும் என ஹராமான உணவை போர்டு(board)போட்டு வியாபாரம் செய்வதுதான். இப்படி ஹராமான பிரியாணியை சாப்பிட்டால் எப்படி இவர்கள் சுவனத்துக்கு போவார்கள்?

அதனல் மூஃமீன்கள் முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது பிரியானியா? இல்ல நபி வழியா?

"விசுவாசிகளே! தங்களுக்கு பிரியானியில் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிந்திப்பவருக்கு நிறைய அத்தாட்சியுள்ளது".
                                          அறிவிப்பாளர் சிவப்புகுதிரை