Thursday 30 May 2013

முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)

"இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை  அடைவதற்காக  ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது  பலவந்தம் அல்லது பயத்தை  ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது"  என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான  விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு  நாம் அகராதியை  ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆனால்  இஸ்லாமிய பயங்கரவாதம் 09/11/2001ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை.  முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.

மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78  க்கு  குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின்  பொதுவான அம்சம் என்னவென்றால்,  அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து  கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு  இல்லாதபோது பிடிக்கப்பட்டார்.  அந்த வகையில், முகம்மதுவால்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.

வரலாற்று ஆசிரியர் அபுல்  ஹுசைன் முஸ்லிம்  நிசாபுரி  எழுதுகிறார் : "இப்னு அஉன்  அறிவித்தார்: போரில்  அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை)  ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்)  எழுதினேன்.  இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது  என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய   கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு  இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு  மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா  பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்." முஸ்லிம் 19:4292

அதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, "அல்லாஹு அக்பர்! கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின்  அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது" என்று கூறினார்.  " முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு  மக்கள்  தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை  கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள்  சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068

" எச்சரிக்கை  செய்யப்பட்டவர்களின்  காலைப்பொழுது மிகவும்  துரதிருஷ்டமானது"  என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம்.   அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம்  என்பது தெரியாமல்   இருந்தது.  தான் தாக்க  விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக  (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான்  இந்த "எச்சரிக்கை" என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள்  அழைப்பு விடுத்துள்ளனர்.  இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. "பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்" என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.  

ஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த'லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).

தொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற "பயம் பற்றிய தொழுகை" (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 - 102)

"நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்"  (4 : 101)

தத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில்  பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள்  இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.

பனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.  ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).

முஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும்  இருந்தனர்,  போரிடுபவர்களாக இருக்கவில்லை.  அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர்.  தரபனி, வ பக்க; சபக்கனி, வ'ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka). 

"அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது  குற்றம் சுமத்தினான்" என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல்,  இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.

ஆசிரியர் : அலி சினா            
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Monday 20 May 2013

ஏழாவது அறிவு



      இப்பொழுதெல்லாம் கொஞ்சம் படித்த இசுலாமிய அறிவுஜீவிகளின் வட்டத்தில் இசுலாத்தை உண்மைபடுத்த அதிகமாக பேசப்படுவது ‘பரிணாமம்’ பற்றிய எதிர்ப்புகள் பற்றியதாகத்தான் இருக்கிறது. இணையதளங்களில் ‘பரிணாமம்’ பற்றிய எதிர்ப்பு கட்டுரைகளை பக்கம் பக்கமாக எழுதி தங்களது ஏழாவது அறிவுக்கூர்மையையும் தங்கள் மதத்தையும் தமக்குத்தாமே மெச்சிக்கொண்டு சொரிந்துகொள்வது சற்று கூடுதலாகவே உள்ளது. தனி நபர்களிடம் நாம் பேசும் சந்தர்பங்களில் எல்லாம் “இப்போ ஏன் ஒரு குரங்குகூட மனிதனாக மாறவில்லை” என்று கேட்காதவர்களே இல்லை.
      அறிவியலில் புதிதாக ஒரு கொள்கை மதக்கோட்பாடுகளுக்கு எதிரானக தோன்றும் பொழுது எதிர்ப்புகள் தோன்றுவது ஒன்றும் வியக்கத்தக்கதல்ல. டார்வினால் ‘பரிணாமம்’ நிறுவப்பட்டபோது பல எதிர்ப்புகளும் மறுப்பு கட்டுரைகளும், புத்தகங்களும் உருவாகின. வேறு பிற அறிஞர்கள் பலர் கொடுவாள்களுக்கும் நெருப்புகளுக்கும் பலியாகி மரணத்தை பரிசாகப் பெற்றதை ஒப்பிடும்போது டார்வினுக்கு கிடைத்த பரிசுகள் சொற்பமானதே. இந்த ‘பரிணாமம்’ பற்றிய எதிர்ப்பு கட்டுரைகளைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் இசுலாமியர்கள் தங்களது ஏழாவது அறிவை வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. ஆய்வுக் கல்வியிலும் (PHD) பின்னர் மருத்துவம், பட்டப்படிப்புகளிலும் பாடமாக இருந்த ‘பரிணாமம்’ இப்பொழுது பள்ளிப் படிப்புகளில் பாடமாக பயிற்றுவிக்கப்படும் நிலைக்கு உண்மைப்படுத்தப்பட்டு உயர்ந்து விட்டது.
      எடுத்துக்காட்டாக பத்தாம் வகுப்பில் முதல் பாடமே ‘பாரம்பரியமும் பரிணாமமும்’ (heredity and evolution) என்பதுதான். அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தோற்றவகைகளான ஹோமினிட்டுகள், ஹோமோ எரக்டஸ், நியான்டர்தால், ஹோமோ சபியன்ஸ் என்ற வகைகளைத்தான் கற்பிக்கிறது. இவர்களின் புனித குர்ஆன் சொல்லுவதுபோல மண்ணால் செய்யப்பட்ட மனிதன் மற்றும் விலங்கினங்கள் படைக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அப்படியே உள்ளன என்று பாடங்களும் இல்லை. கற்பிக்கப்படவும் இல்லை. பரிணாமமும், மரபணு பாடமும் இல்லாமல் மருத்துவப் படிப்போ மருத்துவமோ இல்லை என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது. குற்றவியல் புலாயவுத் துறையில் மரபணுத் தொழில் நுட்பம் இன்றியமையாத இடத்தில் உள்ளது. அந்த அளவுக்கு பரிணாமம் மக்களின் கல்லவியாக்கப்பட்டுவிட்ட பிறகும் இந்த ஏழாவது அறிவாளிகளுக்கு பரிணாமம் பற்றி மீண்டும் மீண்டும் விளக்கமளிப்பது வெட்டி வேலையாகும்.
      பரிணாமத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகளைக்கூட இந்த ஏழாவது அறிவுகள் எதிர்மறையில் உள்ளதாக விளங்கிக்கொண்டு புல்லரித்துப்போய் நிற்கின்றனர். எதிர்குரல் என்ற வலைதளத்தில் அனாதை மரபணுக்கள் என்ற கட்டுரையில் ‘அனாதை மரபணுக்கள்’ என்ற ஆங்கிலக்கட்டுரையை எடுத்துக்காட்டாக முன்வைத்து தாய் தொடர்பு ஏதும் அற்ற முற்றிலும் புதிய அனாதை மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பரிணாமம் கவிழ்துவிட்டதாக எழுதியும் அதன் பின்னே சுவனப்பிரியன்களும் ஆஷிக் அகமதுக்களும் அல்லாஹு அக்கபோரு, அல்ஹம்துலில்லா, ஸஸக்கல்லா, ரஹ்மத்துல்லா, பரகத்துல்லா என்று புல்லரித்துப்போய் நிற்கின்றனர். பரிணாமத்தின் உயிராதாரமே இந்த முற்றிலும் புதிய மரபணுக்கள் உருவாகுவதுதான். அதையே டார்வின் ‘பாய்சல்’ (Mutation) என்கிறார். பரிணாமத்திற்கு நேர்மறையாக உள்ளதையே எதிர்மறை என்று புரிந்துகொள்ள இந்த ஏழாவது அறிவுக் களஞ்சியங்களால்தான் முடியும்.
      சரி, நாமும் பரிணாமம் பொய் என்பதை ஏற்றுக்கொள்பவர்களாக சிறிது நேரம் இருப்போம். அவர்களின் ஆசையை கொஞ்ச நேரமாவது நிறைவேற்றி வைப்போமே. அப்படியானால் அவர்களின் பாடங்கள் எப்படி இருக்கும்? அப்படியே கொஞ்சம் பள்ளிக்கூடத்திற்குள் போவோமா…
      நீண்ட தாடியும் நன்றாக வழவழ என்று மழிக்கப்பட்ட மீசையும் குல்லாவும் போட்டுக்கொண்டுள்ள ஒரு இசுலாமிய அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். அவர் இலக்கியத்திலும் வல்லவராம். அதனால்…
வாத்தியார்  : தஞ்சாவூரு மண்ணெடுத்து
                   தாமிரபரணி தண்ணிய ஊத்தி
                   சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை
                   அது பொம்மை இல்ல பொம்மை இல்ல
                   மனுஷன் தாங்க உண்மை..

பசங்கள்     : சா…ர் நல்லா பாடுறீங்க சா…ர்.

வாத்தியார்  : முண்டங்களா… இது சாதாரண பாட்டு இல்லடா. மனிதன்
             படைக்கப்பட்ட சூத்திரம்டா…
             ஏய் பசங்களா! இன்னைக்கு மனிதன் படைக்கப்பட்ட அறிவியலை                  
              பார்க்கப் போகிறோம்.

பசங்கள்     : சரிங்க சா…ர்.

வாத்தியார்  : பசங்களா நல்லா கவனியுங்க. அல்லா என்ற ஏகக்கடவுள் களிமண்ணை 
             எடுத்து தண்ணியை ஊத்தி நல்லா பிசைந்து ஒரு மனுஷன் மாதிரி  
            பொம்மையா செஞ்சு சூளையில் வைச்சு சுட்டான். தட்டினால் ஓசை வரும் 
            அளவுக்கு பதமா சுட்டு ஆறவச்சான். பிறகு அவன்ட இருந்து உசிறுல 
            கொஞ்சம் எடுத்து ப்ஃபூ... னு அந்த பொம்மைல ஊதி உசிற கொடுத்தான்.  
            அவன்தான் முதல் மனிதன் ஆதம்.

சந்நிரன்     : தஞ்சாவூர் மன்னுலயா சா...ர் ?

வாத்தியார்  : அட சும்மா ஒரு பாட்டுக்கு தஞ்சாவூர்னு சொன்னே. தஞ்சாவூர் 
             சைத்தான் இருக்கிற இடம்டா. உலகத்திலே ரொம்ப புனிதமான இடம் எது  
             தெரியுமா? அது மக்காதான். அந்த மண்ண எடுத்துதான் செஞ்சான்.

ராமு       : சா…ர் அப்போ மூளைய எந்த மண்ணுல செஞ்சான் சா…ர்? அது வேற 
             கலரா இருக்குதுல்ல சா…ர்.

சங்கரன்     : சா…ர் இதயத்த  எந்த மண்ணால செஞ்சான் சா…ர்?

ரஹ்மான்  : கிட்னி, குடல், ஈரல், நுரையீரல் எல்லாத்தையும் மண்ணாலதான் 
            செஞ்சானா சா…ர்?

வாத்தியார்  : ஆமாம்…ஆமாம் எல்லாத்தையு மண்ணாலதான் செஞ்சான்.

ராமு       : எல்லாத்தையும் ஒரே மண்ணால செஞ்சானா சா..ர்?

வாத்தியார்  : இல்ல.. ஒவ்வொண்ணையும் வேற வேற மண்ணால கலர் கலரா செஞ்சு 
             ஒடம்புல மாட்டினான். அதனாலதானே எல்லா உறுப்புகளும் வேறு வேறு  
             கலர் கலரா இருக்கு. இது கூட உனக்கு புரியலயா! கொஞ்சமாவது 
             பகுத்தறிவு வேணும்டா.

வனிதா     : சா…ர் அப்போ நரம்ப நூலால செஞ்சானா சா…ர்?

வாத்தியார்  : ம்ம்… நூலு இல்ல. நைலான் நரம்பால செஞ்சான்.

வனிதா     : அந்தக்காலத்திலயே நைலான் நரம்புலான் வந்திருச்சா சா…ர்?

வாத்தியார்  : இந்த உலகத்தில உள்ள அத்தனையும் அல்லா அப்பவே படைச்சுட்டான். 
              ராக்கெட், கம்ப்யூட்டர் எல்லாம் அப்பவே படைச்சு ஆதமுக்கு அதுங்க 
             பேர்கள (பெயர்களை) எல்லாம் சொல்லிக்க கொடுத்திட்டான்.

சாந்தி       : அப்போ அந்தக்காலத்தில கம்ப்யூட்டர் ஏன் சார் இல்ல?

வாத்தியார்  : அதுவா…. அப்ப உள்ள மனுஷனுக்கு அறிவு பத்தாதுன்னு அல்லா ஒளிச்சு 
             வச்சுட்டான். அத புரிந்து கொள்ள, பாதுகாக்கிற அளவுக்கு அறிவு நமக்கு  
             வளர்ததும் வெளிக்காட்டி தந்தான்.
             நமக்கு ஃபிரவுனை பாதுகாக்கிற அறிவு வளர்ததும் வெளிக்காட்டினால்ல 
             அதுபோலத்தான்..

ரோகினி    : சா…ர் நா ஒரு கேள்வி மட்டும் கேட்டுகவா சா…ர்.?

வாத்தியார்  : என்ன? கேளு

ரோகினி    : எலும்பையும் பல்லையும் கல்லால்தான அல்லா படைச்சான் சார்?

வாத்தியார்  : ம்…. இருக்கலாம். ஆனா அதபத்தி பாடத்தில சொல்லலையே. அதனால 
            அது நம்ம அறிவுக்கு எட்டாததுன்னு உட்டுறனும். அல்லா ஒருவனுக்குதான் 
            அந்த அற்புதம் தெரியும்னு பகுத்தறிவோடு ஏத்துக்கனும். சரியா…?

கவிதா       : இரத்த த்தை  எதுல சார் படைச்சான்?

வாத்தியார்  : ஜம் ஜம் கிணத்து தண்ணில படைச்சான். ஏன் தெரியுமா... அது தான் 
             கெட்டே போகாம சாவுற வரைக்கும் இருக்குமாம்..


      (இடையே ரஹ்மான் சந்திரனிடம் கிசு கிசுத்தான். டேய் உனக்கு தெரியுமா… அல்லா மூளைய மதினாவுல உள்ள மண்ண எடுத்துதான் செஞ்சானாம். எங்க தாதிமா சொல்லிருக்காங்க தெரியுமா… ஏன்னா அங்கதான் எங்க கண்மணி வாழ்ந்தாங்க, இறந்தாங்க. கப்ருகூட அங்கதான் இருக்குதில்ல…

வாத்தியார்  : டேய்…. அங்க என்ன பேச்சி. பேசாம பாடத்த கவனியுங்க. எவ்வளவு 
             முக்கியமான பாடம் நடத்துறேன்…. நீங்க என்டான்னா 
             பேசிக்கிட்டுறிக்கிறீங்க. ஒதை உழும்.

            அடுத்து, … பொம்பளைய எப்படி படைச்சான்னு சொல்றேன். ஆதமுடைய 
             எலும்புல இருந்து முதல் பொம்பளைய  படைச்சான். அந்த  
             பொம்பளைக்கு ஹவ்வான்னு பேரு.

ராமு       : எலும்புல எல்லாம் மனஷன படைக்க முடியுமா சார்?

ரஹ்மான்   : சா…ர் அல்லாவுக்கு அதுலாம் ஈஸிதான சார்!

வாத்தியார்  : ஆமாம்…. நீ உட்காரு
             பொம்பளைய படைச்சி மூளைல கொஞ்சத்த எடுத்துட்டான். அதனால   
             பொம்பளைக்கெல்லாம் ஆம்பிளைங்களவிட கொஞ்சம் அறிவு குறைவு.

ரோகினி    : ஹை…. சார் நாங்கல்ல அதிக மார்க்கு வாங்குறோம்…

வாத்தியார்  : நீங்க அதிக மார்க்கு வாங்குனாலும் அது மக்கப் செஞ்சு வாங்குற  
              மாரக்கு… அது நெசமான அறிவு இல்ல….
             சரி அத உடுங்க நோய்யும் மருத்துவமும் பத்தி பார்ப்போம்.
            
             தொற்றுநோய் என்பதே கிடையாது.

பசங்க
கோரசாக   ; அப்போ பள்ளிக்கூடத்துல ஊசி போட வரமாட்டாங்கள்ல ஹையா… 
              ஜாலிதான்..

வாத்தியார்  : ஏய்…. கத்தாம பாடத்த கவனிங்க. இல்ல அடிதான் உழும்.
             ஈ உடைய ஒரு இறக்கையில விஷமும் இன்னொரு இறக்கையில அந்த  
            விஷத்துக்கு முறிவு மருந்து இருக்கு. அதனால தண்ணி, டீ, கொழம்புல ஈ  
            விழுந்துட்டா உடனே அந்த ஈய அதுவுள்ள நல்லா ஒரு அமுக்கு  
            அமுக்கிவிட்டுட்டு எடுத்துப்போட்டுடனும். அப்புறம் தண்ணிய குடிச்சா  
            விஷம் ஏறாது.

சந்திரன்     : சா..ர் வெளியில விக்கிற போன்டாவுல ஈ மொய்க்குது சார். அத வாங்கி 
             தின்னா ஒரு  இறக்கையில உள்ள விஷத்த மட்டும் போட்டுட்டு போய்டா  
             என்ன சார் பன்னுறது?

ரஹ்மான்   : ஒரு ஈ - யயும் புடிச்சு தின்னுட்டா விஷம் இருக்காதுல சார்.

முருகன்     : சார்.... ஈ ஆய்ல, சளில எல்லாம் உட்கார்ந்திட்டு வருமே சார். அது கால்ல  
              ஒட்டிக்கிட்டு இருக்காத சார்...

வாத்தியார்  : ரொம்ப மெத்தப் படிக்காதீங்கடா.. பீ ஒட்டும்னு புத்தகத்தில இருக்கா?  
           இல்லாததெல்லாம் பேசக்கூடாது. நீ என்ன அல்லாவ விட புத்திசாலியோ…
             புத்தகத்தில இல்லத்தெல்லாம் கேக்கக்கூடாது.

            அடுத்த கவனிங்க. விஷக்காய்சலுக்கு நல்ல மருந்து ஒட்டக மூத்திரம். அத  
            குடிச்சா எப்படிப்பட்ட விஷக்காய்சலா இருந்தாலும் ஒரே நொடியில பறந்து  
            போய்டும்.

சந்திரன்     : சார் இங்க ஒட்டகமே இல்லய சார். நாம என்ன செய்றது சார்?

சதீஷ்       : சார் எங்க தாத்தா மாட்டு மூத்திரத்தை குடிப்பார் சார்.  அத குடிச்சா 
             காய்சல் போகுமா சார்?

வாத்தியார்  : ம்ஹூம்…. அத குடிக்க கூடாது. மாட்டு மூத்திரம் சைத்தானுடைய 
             மூத்திரம். ஒட்டக மூத்திரம் அல்லாவுடைய மூத்திரம். ஒட்டகத்தின் சிறப்ப  
             பத்தி உனக்கு தெரியுமா? அதுல நிறைய பேரு PHD பட்டமெல்லாம் 
           வாங்கிருக்காங்க தெரியுமா? மாட்டு மூத்திரத்தை குடிக்கிறது மூட நம்பிக்கை.  
           ஒட்டக மூத்திரம்தான் அறிவு பூர்வமா சரியானதுன்னு டாக்டர் முல்லா 
           சாகிபு நிருபிச்சு நோபல் பரிசு வாங்கிருக்குறாரு தெரியுமா

சந்திரன்     : சார் இன்னிக்கு காலைல பிரேயர்ல செய்தி படிச்சப்போ பிரதமர் 15 
             ஆயிரம் டன் ஒட்டக மூத்திரம் வாங்க அனுமதி கொடுத்தார்னு 
             சொன்னாங்க சார். இதுக்குதானா சார்.

வாத்தியார்  : ஆமான்டா

மணியடிக்கு சத்தம் கேட்டதும் அவர் எழுந்து போய்விட்டார். கொஞ்சம் நேரத்தில் வரலாறு புவியல் ஆசிரியர் வந்தார். பசங்களெல்லாம் எழுந்து வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு அஸ்சலாமு அலைக்கும் என்று சொல்லிட்டு “இன்னிக்கு பூமி படைக்கப்பட்ட விதம் பத்தி சொல்லப்போறேன்”  என்று பாடம் நடத்த ஆரம்பித்தார். பசங்க இருவர் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

வாத்தியார்  :  ரஹ்மான் அங்க என்ன கிசுகிசுன்னு பேசுற… முருகா என்னடா 
              சொன்னா?

முருகன்     : ஒண்ணுமில்ல சார்…

வாத்தியார்  : என்ன ஒண்ணுமில்ல… சொல்லுடா… சொல்லாட்டி நீயும் அடிவாங்குவே.

முருகன்     : இல்ல சார்… அவனுக்கு பூமி படைச்சதபத்தி தெரியும்னு சொன்னான் 
              சார். அவங்க அப்பா சொல்லி இருக்காங்கலாம் சார்.

வாத்தியார்  : ரஹ்மான் பாடம் நடத்தறப்போ பேசக்கூடாது. இல்ல யாரா இருந்தாலும் 
             அடிதான் உழும்.
             சரி கவனியுங்க
             வானத்தில உட்கார்ந்திருந்த அல்லா குன்னுன்னு சொன்னதும் பூமி 
              உண்டாச்சு.  அத ஒழுங்குபடுத்தி அது ஆடாம இருக்க மலைகள நட்டு, 
             மரங்களெல்லாம் முளைக்க வச்சு பூமிக்கு மேல தட்டு தட்டா ஏழு 
           வானத்தையும் படைச்சான். அப்புறம் ஒவ்வொருவானத்துலயும் ஒரு கடலயும் 
             படைச்சிட்டு ஏழாவது வானத்து கடல்ல இருந்த நாற்காலில  
             உட்கார்ந்துகிட்டான். இப்படி செய்றதுக்கு அவனுக்கு 6 நாளாச்சு. இதுல 
              யாருக்காவது சந்தேகமிருக்கா?

சந்திரன்     : சார். பூமி படைச்சப்புறம்தான் வானத்தை படைச்சான்னு சொன்னீங்க. 
             ஆனா அல்லா வானத்தில இருந்துகிட்டு பூமியை படைச்சான்னு  
             சொல்லறீங்க. எப்படி சார்… வானம் முதல்ல படைக்கப்பட்டதா? பூமி 
             படைக்கப்பட்டதா சார்?

வாத்தியார்  : அத பத்தி சிந்திக்க நமக்கு அறிவு பத்தாது. அல்லா என்ன  
            சொல்லிருக்கானோ அத அப்படியே கேட்டுக்கனும். உனக்குன்னு எதுக்கு 
            அல்லா அறிவு கொடுத்திருக்கான். பகுத்தறிவோடு சிந்திக்கனும். சிந்தியுங்கள்  
            சிந்தியுங்கள் என்று எதுக்கு அல்லா புத்தகத்தில அடிக்கடி சொல்றான். 
            சிந்திக்கனும்டா. சிந்தித்து புத்தகம் சொல்றதை ஏத்துக்கனும். சந்தேகம் 
            எல்லாம் வரக்கூடாது.
முருகன்     : குன்னுன்னு சொன்னா உண்டாகிடும்னு சொன்னீங்க. அப்படின்னா 
              எதுக்கு சார் 6 நாளாச்சு?

வாத்தியார்  : அதிகப்பிரசங்கிதனமா சந்தேகம் கேட்கட்கூடாது. 6 நாளாச்சுன்னு 
            சொன்னா 6 நாளச்சுன்னு படிச்சிக்கனும். அல்லாவுக்கு 1 நாள்னா நமக்கு 
             1000 வருஷம்னு அர்த்தம். தெரியுமா உனக்கு!

முருகன்     : அப்போ பரிட்சையில 6நாள்னு எழுதரதா? 6000 வருஷம்னு எழுதரதா 
              சார்?

வாத்தியார்  : எளவுல.. இது என்ன கோர்ட்டா. குறுக்கு கேள்விலாம் கேட்கக் கூடாது. 6 
             நாள்னு யார் சொல்றாங்களோ அவுங்கள்ட 6 நாள்னு சொல்லனும். 6000  
            ஆண்டுன்னு யார் சொல்றாங்களோ அவுங்கள்ட 6000 ஆண்டுன்னு 
            செல்லனும். புத்திசாலித்தனமா யோசிச்சு அவங்க அவங்க என்ன 
            சொல்றாங்களோ அத அப்படியே சொல்லனும். அப்பத்தான் நீ புத்திசாலி. 
            இத 6 கட்டமாகன்னு கூட ஒரு அவுலியா சொல்லிருக்காங்க தெரியுமா!

முருகன்     : சார் பரீட்சையில எத சார் எழுதுறது?

வாத்தியார்  : அதான் சொன்னேன்ல யார் என்ன சொல்றாங்களோ அவுங்கள்ட 
             அப்படியே சொல்லனும்.

(பையன் திருதிருன்னு முழிச்சதை பரக்கும்போது நமக்கு பாவமாக தோன்றியது.)

வாத்தியார்  : அடுத்து கவனிங்க.
             சூரியன் மறைஞ்சதும் எங்கே போவுதுன்னு தெரியுமா? அது அல்லா 
             இருக்கிற நாற்காலிக்கு கீழே போய் உட்கார்ந்துகிட்டு அல்லாவை 
             வணங்கும். அப்புறம் அடுத்த நாள் காலையில கிழக்கு திசையில உள்ள 
             சைத்தானுடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில உதிக்கும்.

ராமு       : அப்போ அமெரிக்காகாரங்களுக்கு சூரியனே வராதா சார்?

வாத்தியார்  : அதான் அடுத்த நாள் காலையில வருதில்லே.

ராமு       ; அப்போ நமக்கு எப்போ சார் மறுபடியும் உதிக்கும்.?

வாத்தியார்  : (கொஞ்சம் கடுப்புடன்) அடுத்த நாள் காலைல உதிக்கும்னு சொன்றேன்ல…
             ஏய் அடுத்து கவனிங்க
              பூமி உரூண்டைன்னு நிருபிக்கிற சூத்திரத்தை சொல்றேன்.  
              துல்கர்னைன்னு     ஒருத்தர்….

      ஆசிரியர் பாடத்தை தொடர நம்முடன் வந்த நீங்கள் தலை சுற்றுகிறது  என்று சொன்னதாலும்  நமக்கு நேரமின்மையாலும் வெளியே வந்துவிட்டோம்.

     அறிவுநாணயமும், நேர்மையும் இருந்தால் எல்லா இசுலாமியர்களும், இசுலாமிய அமைப்புகளும் கல்வியில் பரிணாமத்தை நடத்தக்கூடாது என்றும், குர்ஆன் எப்படி சொல்கிறதோ அப்படிதான் பாடங்கள் இருக்கவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டோம் என்றும் போராட வேண்டும். அதுபோல இசுலாமிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தாங்கள் பரிணாமத்தின் பாடங்களை நடத்த மாட்டோம் என்று போராட வேண்டும். அரசு மாற்றாவிட்டால்  குர்ஆனுக்கு எதிராக பாடம்  சொல்லிக் கொடுப்பதும் அதில் வரும் வருமானம் ஹராம் என்றும்  தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். 

செய்வார்களா இவர்கள்?

சோற்றை தின்பவர்களாக இருந்தால் செய்யவேண்டும்.

இது எல்லா மதவாதிகளுக்கும்கூட பொருந்தும்.

Thursday 16 May 2013

முஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்



வியாழன், 31 மார்ச் 2011 - கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders)

ஏன் இஸ்லாம் கொல்லக்கூடிய அபாயமாக உள்ளது  என்பதை அறிந்து கொள்வதற்கு குர்ஆனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குர்ஆனையும் மனதில் உருவகித்த முஹம்மதின் குணாதிசயத்தையும் கூட ஒருவர்  சிந்தித்து
  பார்க்கவேண்டும்.

குர்ஆன் வெறும் ஒரு புத்தகம் அல்ல. அல்லாஹ்வே அதை எழுதினார் என்றும் விண்ணில் உள்ள பலகையில் வைக்கப்பட்டுள்ள உம் அல் கிதாப் என்ற மூல ஏட்டிலிருந்து முகம்மதுவுக்கு எழுதி கொள்வதற்காக அது கூறப்பட்டது என்றும்  முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  விளைவாக,  அடக்கத்தில் உள்ளவைகளை பற்றி ஒருவரும் வாதம் புரிய முடியாது. அல்லாஹ்வே எழுதியவையோடு ஒத்து போகாமலிருக்க எவர்தான் துணிவு கொள்வார்? ஜிஹாத் என்கிற வன்முறை முதற்கொண்டு யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள், மதத்தை துறந்தவர்கள் ஆகியோரை வெறுப்பது, துன்புறுத்துவது வரையான முகம்மதிய நடத்தையின் பெரும்பகுதியை இது விளக்குகிறது. மேற்கில் உள்ள நாம் நியதிக்கு மாறானது (abnormal) என்று எதை கருதுகிறோமோ அது இஸ்லாத்திற்கு பரிபூர்ணமாக சர்வ சாதாரணமானதாக இருக்கிறது. முஹம்மது என்ற உருவகம் தான் இஸ்லாத்துடனான இரண்டாவது கடந்து போக முடியாத பிரச்சினை. அவர் யாரோ ஒருவர் அல்ல. அவர் அல்-இன்சான் அல்-காமில், பரிபூர்ண மனிதர். முஸ்லிமாக மாறுவதற்கு ஒருவர் ஷஹாதா (முஸ்லிம் சடங்கு) வை கூற வேண்டும். ஒருவர் ஷஹாதாவை கூறுவதின் மூலம், அல்லாஹ்வை தவிர வழிபடக்கூடிய வேறு கடவுள் இல்லை என்று சாட்சி கூறுகிறார்; முஹம்மது அவருடைய அடியார் மற்றும் தூதர் என்று சாட்சி கூறுகிறார்.

முஹம்மதின் வாழ்க்கை அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று குர் ஆன், ஆகையால் அல்லாஹ் விதிக்கி(றது)றான். இதன் பின்விளைவுகள் அதிபயங்கரமானவை, அனுதினமும் காணக்கூடியவை. முஹம்மதின் புத்தி சுவாதீனத்தை பற்றி அதிகப்படியான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆராய்ச்சியும் இருந்தபோதிலும் , அது அரிதாகவே கூறப்படுகிறது அல்லது விவாதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 150 கோடி முஸ்லிம்கள் பரிசுத்த நபி (தீர்க்கதரிசி) என்றும் பின்பற்றப்பட வேண்டிய முன்மாதிரி என்றும் மதிக்கிற ஒரு மனிதரின் உண்மையான இயல்பை பற்றி விவாதிப்பது தடை செய்யப்பட ஒன்றாகவே இருக்கிறது. மேற்கில், இங்கே நெதர்லாந்தில் அந்த தடை மீறப்பட வேண்டும்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பெய்த் ப்ரீடம் இண்டர்நேஷனல் (Faith Freedom International) ஐ நிறுவிய அலி சினா, ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் முஸ்லிம் ஆவார். அவர் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில், முஹம்மது தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவர்(narcissist), குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile), கூட்டு படுகொலைகாரர்(mass murderer), பயங்கரவாதி(terrorist), பெண்களை வெறுப்பவர்(misogynist), அதீத காம வெறி பிடித்தவர் (lecher), தனிநபர் வழிபாட்டு குழு தலைவர்(cult leader), பைத்தியக்காரர்(mad man), கற்பழிப்பவர்(rapist), கொடூரமாக சித்திரவதை செய்பவர்(torturer), ஆளை அனுப்பி படுகொலை செய்பவர்(assasin), கொள்ளை அடிப்பவர்(looter) என்பதை ஆதாரபூர்வமாக வாதிக்கிறார். மற்ற விதமாக நிரூபணம் செய்பவருக்கு 50000 டாலர்களை வழங்குவதாக அலி சினா அறிவித்திருக்கிறார். அந்த வெகுமதியை இதுவரை ஒருவர்கூட கோரவில்லை. ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில்  சமகாலத்தவர்களின் சாட்சியங்களில் இருந்து பெறப்பட்ட  முஹம்மதின் வாழ்க்கை பற்றிய விவரிப்புகளான ஹதீத்கள் போன்ற இஸ்லாமிய நூல்களையே   அந்த விவரமானது அடிப்படையாக கொண்டது.

வரலாற்று முஹம்மது மதீனாவில் இருந்த கொள்ளையர் கும்பலின் காட்டுமிராண்டி தலைவராக இருந்தவர். எந்தவித உறுத்தல்கள் இன்றி, அவர்கள் கொள்ளை அடித்தார்கள்; கற்பழித்தார்கள்; படுகொலை செய்தார்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களின் தொண்டைகள் அறுக்கப்பட்ட, கைகளும் கால்களும் வெட்டி வசப்பட்ட, கண்கள் தோண்டப்பட்ட, ஒட்டுமொத்த குலங்களும்  படுகொலை செய்யப்பட்ட  காட்டுமிராண்டி களியாட்டங்களை மூல நூல்கள் விவரிக்கின்றன. 627 ஆம் வருடம் மதினாவில் இருந்த குறைழா  என்ற யூத குலம் நிர்மூலமாக அழிக்கப்பட்டது ஒரு உதாரணம். அவர்களுடைய தலைகளை துண்டித்தவர்களில் முகம்மதுவும் ஒருவர். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ளும்போது, அந்த பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது என்பதை காண்பது ஒன்றும் கடினமானது அல்ல.
குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile) என்று முகம்மதுவை அழைத்ததின் மூலம் ஒரு மதத்தை அவமதித்ததற்காக வியன்னாவில் பெண்கள் உரிமை சேவகர் எலிசபெத் சபடிட்ஷ் உல்ப் அபராதம்  செலுத்தும்படி சமீபத்தில் தண்டனை கொடுக்கப்பட்டார்.  ஆனாலும் அதுதான் உண்மை. முஹம்மதின் விருப்பத்திற்குரிய மனைவியான, குழந்தை மனைவியான ஆயிஷாவின் சாட்சியங்களை பல ஹதீத்கள் கொண்டிருக்கின்றன. ஆயிஷா நேரடியாக :சொல்கிறார் : "நான் ஆறு வயதாக இருந்தபோது நபியவர்கள் என்னை திருமணம் செய்துகொண்டு, நான் ஒன்பது வயதானபோது என்னுடன் உடலுறவு கொண்டார்கள்."
வரலாற்றாசிரியர் தியோபன்ஸ்-Theophanes(கி.பி.752-817) கூற்றுப்படி, முஹம்மது காக்கா வலிப்புகாரராக இருந்தார். சில நேரங்களில் கக்கா வலிப்பு நெருக்கடிகளை மாய தோற்றங்கள் (hallucinations) பின்தொடருகின்றன; நெற்றியில் வியர்வை ஏற்படுகிறது; வாயில் நுரை தள்ளுகிறது. முஹம்மது தன்னுடைய காட்சிகளின்போது(visions) இந்த அறிகுறிகளையே காட்டினார்.

"மற்றொரு முஹம்மது" - The Other Muhammad (1992) என்ற தன்னுடைய நூலில் ப்ளெமிஷ் உளவியலார்(Flemish Psychologist) Dr.ஹெர்மன் சோமர்ஸ், நபி தன்னுடைய நாற்பதுகளில் அக்ரொமெகலி(acromegaly) என்ற நோயால் அவதிப்பட தொடங்கினார் என்ற முடிவுக்கு வருகிறார். மூளைக்கு கீழே அமைந்துள்ள சிறிய உறுப்பான பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் கட்டியினால் இந்த நிலை ஏற்படுகிறது.   பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டி

மூளையில்  அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, இல்லாத விஷயங்களை மனிதர்கள் பார்க்கவும் கேட்கவும் ஆரம்பிக்கிறார்கள். சந்தேக நோய்த்தனமான குணாதிசயங்களால் ஆன தொடர்ச்சியான மாய தோற்ற பாதிப்பு என்பதுதான் முஹம்மதின் வன்முறையை நாடும் மனநோய் நிலையை பற்றிய சோமர்சின் நோய் ஆராய்ச்சி முடிவு ஆகும்.
சந்தேகநோய்த்தனமான மாயதோற்ற மனசிதைவு நோய் (paranoid hallucinatory schizophrenia) யை பற்றி ஜெர்மானிய மருத்துவ வரலாற்றாசிரியர் அர்மின் ஜியஸ் (Armin Geus) பேசுகிறார். இதை போன்ற ஒரு பகுப்பாய்வு டெடெ கோர்குட் (De de Korkut) என்ற மருத்துவரால் எழுதப்பட்ட "முஹம்மதின் மருத்துவ வரலாறு"(The Medical Case of Muhammad)  என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

"முஹம்மதின் உளவியல் : நபியுடைய மூளையின் உள்ளே" - Psychology of Muhammad : Inside the Brain of a Prophet என்ற தன்னுடைய புத்தகத்தில், "அதிகாரத்தில் இருந்த வன்முறை மனநோயாளியின் பரிபூரண உருவகம்" என்று முகம்மதை டாக்டர் மசூத் அன்சாரி அழைக்கிறார். முஹம்மது அதிகார வெறி நாட்டங்களும், தாழ்வு மனப்பான்மையும், மனரீதியில் தடுமாற்றம் கொண்ட சந்தேக மனநோய் குணாதிசயத்தை கொண்டிருந்தார். தனக்கு பிரபஞ்ச பணி (cosmic mission) இருப்பதாகவும் தன்னை தடுக்க எதுவும் இல்லை எனவும் நம்பும்படி அவரை வழிநடத்தி செல்கின்ற காட்சிகளை (visions) அவர் தன்னுடைய நாற்பதுகளில் காண தொடங்கினார்.

உண்மை எப்பொழுதும் இனிமையாகவோ அல்லது அரசியல் ரீதியாக சரியானதாகவோ இருப்பதில்லை. நெதர்லாந்தில் வாழும் பத்து லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் உள்ள நூற்று ஐம்பது கோடி மக்கள்  முகம்மதை தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்ப்டி   இஸ்லாமிய மதம் கடமையாக்குகிறது என்று மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் வாதிட முடியும்.

ஒருவர் முஸ்லிமாக மாறிய பிறகு திரும்பி செல்வது என்பதே கிடையாது. ஏனெனில் "தன்னுடைய மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ மாற்றிக்கொள்வதற்கு" ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது என்று மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையின் 18 வது பிரிவு கூறினாலும் கூட, நம்பிக்கையை துறப்பதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனையே உள்ளது.

இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார் - நான் அனுபவித்து இருப்பதை போல. இஸ்லாம் மற்றும் முஹம்மதின் செல்வாக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் எவரும் மரண அபாயத்துக்கு உள்ளாகிறார். விஷயங்களின் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வதை நாம் தொடர முடியாது.  முஹம்மதின் உண்மையான இயல்பையும்  குணத்தையும்  பற்றிய வெளிப்படையான விவாதம்  இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பும் உலகம்  முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அறிவையும் ஆதரவையும் கொடுக்கும். நம்பிக்கையை துறந்தவ ர்கள் (apostates) நாயகர்கள். முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாக, உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மனிதர்களின் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த விஷயத்தில் கட்சி அரசியல் விளையாடக்கூடாது. முகம்மதை அம்பலபடுத்துவதின் மூலம் இந்த  மக்களுக்கு நாம் உதவி புரிவதற்கு இதுவே சரியான தருணம்.


கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders) நெதர்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர். அவர் சுதந்திரத்திற்கான கட்சியின் (PVV) தலைவராக உள்ளார். "HP/De Tijid" என்ற டச்சு மொழி வார இதழில் இந்த கட்டுரை மார்ச் 30, 2011 அன்று பிரசுரமானது.
 
மொழி பெயர்ப்பு : ஆனந்த்  சாகர் 

Thursday 2 May 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -26


விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!
புஹாரி ஹதீஸ் : 6837          
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.
ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்... (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம். உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?

அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டி. உரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு  அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.
Malik's Muwatta:Book 28, Number 28.15.38:
Yahya related to me from Malik from Ibrahim ibn Abi Abla from Abd al-Malik ibn Marwan that he gave a slave-girl to a friend of his, and later asked him about her. He said, "I intended to give her to my son to do such-and-such with her." Abd al-Malik said, "Marwan was more scrupulous than you. He gave a slave-girl to his son, and then he said, 'Do not go near her, for I have seen her leg uncovered. "
(நண்பருக்கு கொடுத்த அடிமைப் பெண்ணைப் பற்றி கேட்கையில், அவர் அந்த பெண்ணை, ‘கசமுச’ செய்ய தன் மகனுக்கு அளிப்பதற்காக திட்டமிட்டிருப்பதாக கூறும் ஒருசெய்தி)

இவ்வாறாக அடிமைப்பெண்களை விரும்பியவர்களுக்கு வழங்கலாம். முஹம்மது நபிக்கு எகிப்திய ஆட்சியாளர், மரியத்துல் கிப்தியா, ஷிரின் என்று இரண்டு பெண்களை பரிசாக வழங்கியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மனைவிகளோ, அடிமைப் பெண்களோ இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது?

அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி  அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்தது. அல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம். அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும், குற்றமும் இல்லை. அல்முத்ஆ  திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.

போர்காலங்களில் சஹாபக்கள் தங்கள் மனைவியரைப் பிரிந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. சஹாபக்களின் உடல் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டனர். அதைக் கண்ட முஹம்மது நபி அவர்கள் போர் காலங்களில்  அல்முத்ஆ திருமணத்தை அனுமதித்தார். சஹாபக்கள்தங்களும் உடல் தேவைகளை அல்முத்ஆ திருமணம் மற்றும் பெண் போர்க் கைதிகளை அனுபவித்தல் என அல்லாஹ்வின் முழு அனுமதியோடு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

ஆண்கள், மனைவியை விடுத்து பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதை தடுப்பதற்காகவே புர்க்கா – ஃபர்தா/ ஹிஜாப் என்ற உடையை பெண்கள் அணிய வேண்டும் என்று முஹம்மது நபி கூறினார். எனவே  கற்புநெறியை ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது என்று உங்களையும் உலகை ஏமற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சாரா பீரங்கிகளின் வார்த்தைகளில் ஏதாவது பொருளிருப்பதாக தோன்றுகிறதா?

புகாரி ஹதீஸ் -5116
அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அல்முத்ஆ (தவணை முறைத்திருமணம்) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் (பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே! என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 5116,5117,5118,5119)

பின் நாளில் முஹம்மது நபி  அவர்கள் அல்முத்ஆ  திருமணத்தை தடை செய்தார் என்று  ஸுன்னி முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஆனால் ஷியா முஸ்லீம்களிடையே அப்படி எந்த தடையுமில்லை. ஒவ்வொருவரும், வாழ்வில் ஒருமுறையேனும் அல்முத்ஆ (தவணை முறைத் திருமணம்) செய்ய வேண்டும் என வலியுறுத்திக்கூறும் ஹதீஸ்களை ஷியாக்கள் முன்வைக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -5115
முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது
எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், அல்முத்ஆ) தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று சொன்னார்கள்.

அலீ அவர்களின் பெயரால் புனையப்பட்டதாகக் கூறி இந்த ஹதீஸை ஷியாக்கள் அடியோடு மறுக்கின்றனர். கீழே காணும் இந்த ஹதீஸ் மக்கா வெற்றியின் பொழுது நிகழ்ந்தது, முஹம்மது நபியின் அனுமதியோடு அங்கு அல்முத்ஆ திருமணம் நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது. அதாவது மேற்கூறிய கைபர் போருக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சி இது

 ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (சப்ரா பின் மஅபத் -ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் மக்கா வெற்றிப் போரில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்காவில் பதினைந்து நாட்கள் (முப்பது இரவு - பகல்கள்) தங்கியிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த (என் தந்தையின் சகோரர் புதல்வர்) ஒருவரும் (பெண் தேடிப்) புறப்பட்டோம். நான் அவரைவிட அழகில் சிறந்தவனாக இருந்தேன். அவர் சுமாரான அழகுடையவராகவே இருந்தார்.
எங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு போர்வை இருந்தது. எனது போர்வை மிகப் பழையதாயிருந் தது. என் தந்தையின் சகோதரர் புதல்வரது போர்வை புதியதாகவும் மிருதுவாகவும் இருந்தது. நாங்கள் மக்காவிற்குக் "கீழ் புறத்தில்' அல்லது "மேற் புறத்தில்' இருந்தபோது, கழுத்து நீண்ட இளம் ஒட்டகத் தைப் போன்ற (அழகான) கன்னிப் பெண் ஒருத்தி எங்களைச் சந்தித்தாள். அவளிடம் நாங்கள், "எங்களில் ஒருவரை "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள இசைவு உண்டா?'' எனக் கேட்டோம். அவள், "நீங்கள் இருவரும் (எனக்காக) என்ன செலவிடுவீர்கள்?'' என்று கேட்டாள். எங்களில் ஒவ்வொருவரும் எங்களிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினோம். அவள் எங்கள் இருவரையும் கூர்ந்து நோக்கலானாள். என்னுடன் வந்திருந்தவர் அவளது ஒரு பக்கத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, "இவரது போர்வை பழையது; எனது போர்வை புதியது; மென்மையானது'' என்று சொன்னார். உடனே அவள், "இவரது போர்வையே பரவாயில்லை (அதுவே போதும்)'' என மூன்று முறை, அல்லது இரு முறை கூறினாள். பிறகு அவளை நான் "அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் செய்துகொண் டேன். நான் (அங்கிருந்து) புறப்படவில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்திருமணத்திற்குத் தடை விதித்து விட்டார்கள்.
முஸ்லீம் 2729

அல்முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டதாகவும், பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தடை செய்யப்பட்டதாகவும்அனுமதிக்கப்பட்டதாகவும் பல செய்திகள் காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அன்றைய காலத்தில் அல்முத்ஆ  திருமணம் நடை முறையில் இருந்ததென்பதும், தடை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதரங்களில்லை மறுக்க முடியாத உண்மை.

போர் காலங்களில்  சஹாபக்களின் மனைவியர்களும்தான் தனிமையில் இருக்க வேண்டிய நிர்பந்தம். “அல்லாஹ்வின் ரசூலே போர்காலங்களில் எங்களுடைய கணவர்களைப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியுள்ளது எங்களின் உணர்வுகளுக்கு என்ன பதில்?” என்று சஹாபக்களின் மனைவியர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?.

அல்முத்ஆ திருமணம் என்பது (ஹலாலான) விபச்சாரத்தை தவிர வேறு என்ன? இன்று நம்மில் பல ஆண்கள் வயிற்று பிழைப்பிற்காக கடல் கடந்து செல்கிறார்கள். தங்கள் மனைவியர்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழவேண்டிய சூழ்நிலை அந்த ஆண்களும், அவர்களின் மனைவியரும் உணர்ச்சிகளற்ற ஜடமா? அவர்களுக்கும் அல்முத்ஆ திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே அருவருப்பாக தோன்றவில்லையா?

மது அருந்துவது இனி முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று ஓரேஅடியாக தடை செய்தால் மனிதர்கள் "நாங்கள் ஒருபோதும் மது அருந்துவதை கைவிடமாட்டோம்" என்றும், விபச்சாரத்திற்கு தடைவித்தால், "நாங்கள் ஒரு போதும் விபச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டோம்" என்றும் கூறி மறுத்து விடுவார்களாம் எனவேதான் படிப்படியாக தடைவிதிக்கப்பட்டது. என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.

 முதலில் அந்த ஹலாலான விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும்? பின் நாளில் ஏன் தடைசெய்ய வேண்டும்?

அந்தந்த காலகட்டத்தில் தேவைக்கேற்ப புதிய வழிமுறைகள் அல்லாஹ்வினால் வஹியாக இறக்கப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்யாருடைய தேவைக்கு? முஹம்மது நபி  அவர்களின் தேவைகளுக்காகவா அல்லது மனிதர்களின் தேவைகளுக்காகவா?

புஹாரியின் ஹதீஸ், முஸ்லீம்கள் தங்களது அரசாட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகே, முத்ஆ திருமணங்கள் கியாமத் நாள்வரையிலும் தடைசெய்யப்பட்டதாக கூறுகிறது. இதை கவனித்தால் இதில் மறைந்துள்ள சூழ்சியை நீங்களே அறியலாம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்,
முத்ஆ திருமணங்கள் முதலில் ஏன் அனுமதிக்கப்பட்டது?

          முஹம்மது நபி தனது படையினர் போரில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க எல்லா வழிகளிலும் உற்சாகப்படுத்தினார். பலதாரமணம், அளவில்லா அடிமைப் பெண்களுடன் கூடி மகிழ அனுமதி, எதிரிகளின் பெண்களையும், செல்வங்களையும்  சூறையாடுதல், சொர்க்கம், ஹூருலீன் கன்னியர்களுடன் சல்லாபம், நரகம் என்று  நியாய அநியாயங்களையும் ஒழுக்க முறைகளையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெற்றியை வெறித்தனமாக அடைவதற்கு பல வழிகளிலும் உற்சாகப்படுத்தினார் அவற்றில் ஒரு வழிமுறையே இந்த முத்ஆ திருமணங்கள்தனது தேவை முடிவடைந்ததும் தடைசெய்து விட்டார்.

          வஹீ எனப்படும் முறையில் வெளியான குர்ஆன் வசனங்களையும் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பொழுது, இவைகள் சர்வ வல்லமையுடையவன் என்று போற்றப்படும் இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது எனத் தோன்றியது. ஏகத்துவ செய்தியை மக்களிடையே கூறுவதற்கு, இனப்படுகொலைகளும்கொள்ளையடித்தலும், கற்பழிப்பதலும், விபச்சாரம் செய்ய அனுமதித்தலும், வாக்குறுதிகளை மீறி பொய் சொல்லி ஏமாற்றுதலுக்கும் (தக்கியா-புனிதமோசடி) அவசியம் என்ன? இவைகளை முன்னின்று செய்வதற்கும் இறைத்தூதர் என்றொருவர் தேவையா?  இவர் கூறும் அக்கிரமங்களை வேதவாக்கு என்று நம்ப வேண்டும். மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்?
 நல்ல வேடிக்கை இது !

முஹம்மது தனது மிகக் கீழ்த்தரமான எண்ணங்களையும் விருப்பங்களையும் அல்லாஹ்வின் வேதவாக்கு எனக் கூறி நிறைவேற்றிக் கொண்டார்

குர்ஆன் முழுவதுமே இறைவனின் வார்த்தைகளல்ல என்ற முடிவை அடைந்தேன். ஒருவேளை இறைவனின் வார்த்தைகளுடன் முஹம்மது நபியின் சொந்த சரக்குகள் சிலவற்றை குர்ஆனுக்குள் நுழைத்து விட்டிருப்பாரோ என்றும் தோன்றியது. முழு குர்ஆனிலுமிருந்து முஹம்மது நபியின் கைச்சரக்குகளையும் அல்லாஹ்வின் வாக்குகளையும் பிரித்தறிவது எப்படி?

  குர்ஆன் எவ்விதமான முரண்பாடுகளுமற்றது மிகத் தெளிவானது முன்னறிவிப்புகள் நிறைந்தது இதுவே குர்ஆன் இறைவனின் சொல் என்பதற்கான நிரூபனம் என்று, இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் நினைவிற்கு வந்ததுஎனவே குர்ஆனின் மேலும் சில பகுதிகளையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன்

தஜ்ஜால்

பின் குறிப்பு :
கூடுதல் விளக்கம் தேவை எனில் “முத்துக் குளிக்க வாரீகளா... முத்ஆ செய்ய வாரீகளா...!!!” பார்க்கவும்