Thursday 3 December 2015

பைஅத் ரிள்வானும் பைத்தியக்கார கடவுளும்!



ஹிஜ்ரி  ஆறாம் ஆண்டு உம்ரா வழிபாடு செய்வதற்காக முஹம்மது தனது தோழர்களுடன் மக்காவிற்கு செல்கிறார். அல்லாஹ்விற்கு  பலியிட ஒட்டகங்களையும், அவரது தோழர்கள் 700 பேர் இருந்ததாக அஹ்மத் ஹதீஸும், 1400 பேர் இருந்ததாக புகாரி ஹதீஸூம் கூறுகிறது. நாம் இரண்டு ஹதீஸ்களுக்கும் பொதுவாக 1050 பேர்கள் இருந்ததாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்கள் மனதில் இப்படியொரு கேள்வி எழலாம், அல்லாஹ்விற்கு பலியிட 1050 மனிதர்களையா முஹம்மது அழைத்துவந்தார்? 

ஆமாம்..!  என்றுதான் சொல்லுவேன்!

அல்லாஹ்விற்காக(!) முஹம்மது நிகழ்த்திய போர்களைப்பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு மனித இரத்தவாடையின் மீதிருக்கும் மோகம் என்னவென்பது புரியும்!

ஆனால் முஹம்மது இந்தப் பயணத்தை ஒரு புனிதப் பயணமென்றே கூறிக் கொண்டார். அதாவது ஒருவர் தனது மறுமை வாழ்விற்காக நன்மைகளைச் சேர்க்க இதர வழிபாடுகள் செய்வதப் போன்று உம்ராவும் ஒரு வழிபாடு என்று கூறியதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். முஹம்மது தனது மறுமை வாழ்வு சிறக்க வழிபாடு செய்யட்டும் தவறில்லை அது அவரது நம்பிக்கை. ஆனால் அதை  1050பேர் புடைசூழ சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா?
சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கிறது!

முஹம்மது, மக்கா குறைஷிகளை ஆழம் பார்ப்பதற்காக, கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகளில் சிலர்  அறுத்து, கிராஷையும் கொலை செய்யவும் முனைந்தனர். அதற்குள் அங்கிருந்த பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய முயன்றவர்களைத் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை, முஹம்மதுவிடம் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.

உடனே முஹம்மது, ஊரறிந்த முரடரான  உமரை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மானை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று  சமர்த்தியமாகப் பேசி நழுவிவிட்டார்.

வேறுவழியில்லாமல், முஹம்மது உஸ்மானை அழைத்து, "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகிறார்.

மக்கா சென்ற உஸ்மான், அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைத் தெரிவிக்கிறார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மானிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளிக்கிறார். தொடரும் பேச்சுவார்த்தைகள் உஸ்மான் திரும்பிச் செல்வதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கால தாமதம் முஹம்மதிடம்  வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக தவறான செய்தி முஹம்மதுவின் கூட்டத்தினரைச் சென்றடைகிறது. இரத்தவாடையை நுகர  ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்தவர்களுக்கு  இந்தத் தகவல் ஆறுதலை அளித்தது. முஹம்மதுவும் அவரது, தோழர்களும் கடுமையான கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து குறைஷிகளும். இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் முஹம்மது தனது அடியாட்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்து, தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார். அதன் பின்  ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்தனர். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

புஹாரி 4169.
யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்.
நான், ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்" என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று பதிலளித்தார்கள்..

முஸ்லீம் 3793
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சலமா (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)" என்று பதிலளித்தார்கள்.

உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்று இரத்தவாடையை நுகர அல்லாஹ்வும் மூக்கைத் தீட்டிக் கொண்டு உற்சாக வசனங்களை இறக்குகிறான்.

குர்ஆன் 48:10
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

முஹம்மதுவும் அவரது அல்லாஹ்வும் இரத்தவாடைக்காக காத்திருந்த பொழுது, ஒரு திடுக்கிடும் செய்தி வந்து சேர்கிறது. அதாவது, உஸ்மான் கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் அவர்களை வந்தடைகிறது. வேறுவழியில்லாமல் விருந்தை வேறொரு நாளுக்கு வைத்துக் கொள்வோமென்று சமாதான நடவடிக்கைக்கு முஹம்மது செல்கிறார்.

உஸ்மான் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்பது முஹம்மதுவிற்குத் தெரியாது. காரணம் அவர் ஒரு சாதாரண மனிதர்; தனது மருமகன் உஸ்மான் கொலை செய்யப்பட்டுவிட்டாரே என ஆத்திரம் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?

”அட... அரை லூஸுகளே உஸ்மான் கொல்லப்படவில்லை! உயிருடன்தான் இருக்கிறார். தேவையில்லாமல் துள்ளிக் குதிக்காதீர்கள்” என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்?

எதார்த்த உண்மை புரியாமல், உளறிக் கொட்டிய அல்லாஹ்வை, பைத்தியக்காரன் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்?


தஜ்ஜால்

Saturday 24 October 2015

குர்ஆனும் விபச்சாரமும்!


குர்ஆனும் விபச்சாரமும்!

எனது தனிப்பட்ட பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக எழுத்துப்பணிகளை நிறுத்தியிருந்தேன். மீண்டும் எழுதுவதற்கான வாய்புக்களை உருவாக்கிக் கொண்டிருந்தபொழுது எனது Data Base-ஐ விட்டு வெகு தொலைவிற்கு பயணிக்க வேண்டிய சூழல்; மேலும் சென்ற இடத்தில் எழுதுவதற்கான  கருவிகளும், தேவையான தகவல்களை திரட்டும் வாய்ப்பின்றிப் போனது. (இறை நாடவில்லையென்று நினைக்கிறேன்!)
ஒரு வழியாக கிடைத்த வாய்ப்புகளையும், என் நினைவிலிருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி எழுதுவதென்று முடிவெடித்து, குர்ஆன் வசனங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல தமிழ் மொழிபெயர்ப்புகள், அந்தந்த மொழிபெயர்ப்பாளர்களின் சொந்த சரக்குகளால் இனிப்பு முலாம் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் புரட்டிய பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சந்தேகம் தோன்றியதால் Google translator-க்குள் கொடுத்துப்பார்த்தேன். அந்த ஆங்கில வாக்கியம் இதுதான்
”…And if one force them, then (unto them), after their compulsion, lo! Allah will be Forgiving, Merciful. (Pickthall)
…But if anyone compels them, yet, after such compulsion, is Allah, Oft-Forgiving, Most Merciful (to them). (Yusuf Ali)
 إِكْرَاهِهِنَّ - ik'rāhihinna
Pickthall மொழிபெயர்ப்பிலிருந்து “after their compulsion” என்ற பகுதியை மட்டும் -ல் கொடுத்தேன். என்ன ஆச்சரியம் அவர்களது கொண்டை வெளியே தெரிந்துவிட்டது. (அல்ஹம்துலில்லாஹ்!) 
 
நீங்களும் அதைப்பாருங்கள். இவர்கள் தங்களது புத்தகத்தை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் என்பதற்கு இது ஒரு எளிய உதாரணம்.
their compulsion- பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட


Yusuf Ali யின் மொழிபெயர்ப்பிலிருந்து “after such compulsion” என்ற பகுதியைக் கொடுத்தபொழுது இப்படிக் காண்பித்தது.



தலைப்பிற்கு வருகிறேன்.

இஸ்லாமிய பரப்புரைகளில் மிகப் பிரதானமாக இடம் பெறுவது அதன் குற்றவியல் தண்டனைகளைப்பற்றி இருக்கும்.

இந்திய போன்ற நாடுகளில் பணநாயகம் குற்றவாளிகளை விடுவிக்கும் பொழுது, இவர்களது பரப்புரை உச்சகட்டத்தை அடையும். குறிப்பாக பாலில்குற்றங்கள் விவாதிக்கப்படும் பொழுது குர்ஆனிய சட்டங்களை ஆதரிக்கும் மாற்று மதநம்பிக்கையாளைகளையும் காணமுடியும்.

குர்ஆன் எவற்றையெல்லாம் பாலியல் குற்றங்களாகக் கருதுகிறது?

1. பெண்கள் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவது.
2. பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது.
கற்பழிப்பு எனப்படும் வன்புணர்ச்சியைப்பற்றி குர்ஆனுக்குத் தெரியாது எனவே அதை விட்டுவிடுவோம்.

சரி... குர்ஆன்  என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
குர்ஆன் 4:15
 உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்!
அதென்ன மானக்கேடான செயல்?
அதை பெண்கள் மட்டும்தான் செய்வார்களா?
உங்களுக்கு பதில் சொல்வதற்கு முன் அடுத்த வசனத்தைக் கூறிவிடுகிறேன்.

குர்ஆன் 4:16
அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
அதே செயலா ...?  எந்த செயல்...?

தண்டனை கொடுப்பது இருக்கட்டும். செயல் என்வென்றே தெரியவில்லை. பிறகெப்படி அதைக் குற்றமாகக் கருதி நான்கு பேரை சாட்சிக்கு கொண்டுவர முடியும்? தண்டனை கொடுக்க முடியும்?

சரி.. உங்களில் இருவர் என்றால்....? எந்த இருவர்?
பெண்ணும் பெண்ணுமா...?

ஆணும் ஆணுமா..?

இல்லை ஆணும் பெண்ணுமா?

எந்த இருவர்?

மறுபடியும் முதலிலிருந்து..

மானக்கேடானது என்றால் என்ன?

மானத்தை பாதிக்கக் கூடியது எல்லாமே மானக்கேடானதுதான்

அடுத்த கேள்வி யாருடைய மானத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது?

உதாரணத்திற்கு, ஆடை விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆதிவாசிகளுக்கு ஆடை ஒரு பொருட்டல்ல. இன்றும் ஆடை அணியாத ஆதிவாசிகளை நாம் காணமுடியும்.  நாகரீக மேற்குலகில் ஆடை அவரது விருப்பம். அல்லாஹ்விற்கோ நடமாடும் கூடாரத்துடன் இருக்கவேண்டும்.  அல்லாஹ்வின் பார்வையில் ஆதிவாசியும், நாகரீக மேற்குலகமும் மானக்கேடான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் பிடித்து தண்டிக்கலாமா...?

யார் தண்டிப்பது...?

குர்ஆனை வாசித்தவரெல்லாம் தண்டனை கொடுக்கலாமா...?

தண்டிப்பதற்கான  அதிகாரம் யாரிடம் இருக்கிறது..?

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் தண்டனைகளை செயல்படுத்த வேண்டுன்று முல்லாக்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா...? குர்ஆனின்படி சரியானதா...?
ஒரு ஆட்சியாளர் அல்லது அதிகாரி அல்லது நீதிபதி எப்படி இருக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் ஏதேனும் குர்ஆனில் இருக்கிறதா என்றால் நிச்சயமாகக் கிடையாது. அப்படி ஏதேனும் இருந்திருந்தால் இத்தனை இஸ்லாமியக் குழுக்கள் எப்படி ஏற்படமுடியும்?

எந்த அளவுகோலும் கிடையாது. யார் தண்டிப்பது என்றும் கிடையாது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பார்களே  அதுதான் என்றும் இஸ்லாமில் நிகழ்ந்து கொண்டிருப்பது.

முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்காக நிகழ்ந்த வன்முறைகள் இன்னுமொரு உதாரணம். நமது தலைப்பிற்கு அது தொடர்பில்லாதால் நாம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டாம்

சரி..... நாம் மேற்கொண்டு நகருவதற்கு வசதியாக, மானக்கேடானது என்று குர்ஆன் கூறுவது விபச்சாரத்தைதான் என்றும் யாரோ ஒரு' X' தான் நீதிபதி; அவர் தண்டனை வழங்குவதாகவும்  வைத்துக் கொள்வோம்.

குர்ஆனின் வேறு பகுதிகளில், விபச்சாரம் தவறென்றும், தண்டனைக்குரிய குற்றம் என்றும், தண்டனை முறையும் காணப்படுகிறது.
குர்ஆன் 17:32
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது.
குர்ஆன் 24:2
விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும்.(IFT)
நாம் முதலில் கவனித்த குர்ஆன் (4:15&4:16) வசனங்களை  மேற்கண்ட இந்த (24:2) வசனம் இரத்து செய்துவிட்டதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். இப்படி வாலும் தலையுமில்லாமல் ஒரு விதிமுறையைக் கூறினால்  நீக்காமல் வேறு என்ன செய்வார்களாம்?

الزِّنَا (alzina) விபச்சாரம் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 
இதற்கு குர்ஆனில் பதில் இல்லை. நாம் சமுதாயத்திலிருந்துதான் தேட வேண்டும் சட்டத்திலிருந்து அல்ல!

ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து பாலியல் தொடர்பு கொள்வதை சட்டம் தவறாகப் பார்க்கவில்லை. ஆனால் சமுதாயம் தவறாகப் பார்க்கிறது. அதாவது திருமண பந்தத்திற்கு அப்பால் பொருளுக்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ நடைபெறும் பாலியல் தொடர்புகளை விபச்சாரம் என்று கூறுவதாக வைத்துக் கொள்ளலாமா?

குர்ஆனின் சட்டங்களை விவாதிப்பதென்றால் முஹம்மதின் கால நடைமுறைக்கு அதாவது குர்ஆனிய காலாச்சாரத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். குர்ஆன் அனுமதிக்கும் பாலியல் துணைகள் :

குர்ஆன் 4:24
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்
PJ மொழிபெயர்ப்பு

4:24. கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் (திருமணக் கட்டணமாகிய "மஹரைக்" கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரோடு வீடு கூடிவிட்டீர்களோ அவருக்கு குறிப்பிட்ட "மஹரை" அவரிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்து விடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதனைக் குறைக்கவோ கூட்டவோ) இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது யாதொரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்.

4:24. மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
(IFT) தமிழாக்கம்
மூன்று மொழிபெயர்ப்புகளும் ஒன்றையொன்று மிகைக்கும் விதத்தில் இனிப்புமுலாம் தடவப்பட்டிருக்கிறது. யாருக்கும் முதலிடம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

மேற்கண்ட 4:24 வசனத்தின் துவக்கத்தில் வரும் وَالْمُحْصَنَاتُ (வல்முஹ்ஸனாத்) என்ற பதம் இங்கு பிறரது மனைவியர், கணவனுள்ள பெண், திருமணம் என்றெல்லாம் படாதபாடு படுகிறது. உண்மையில் இதன் பொருள் “மேலும் கற்புள்ள பெண்- And chaste women” என்பது மட்டுமே. நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் அரபியில் இருக்கும் பதத்தை tranalator-ல் கொடுத்துப்பாருங்கள். தாங்கள் விரும்பும் பொருளில் மொழிபெயர்ப்பு அமையவேண்டுமென்பதற்காக இந்த முல்லாக்கள் இடத்திற்கேற்ப அதை மாற்றிவிடுகின்றனர். இதைப்பற்றி அண்ணன் பிஜே எழுதியிருப்பதை பாருங்கள்

wal-muḥ'ṣanātu என்பதை கற்புள்ள பெண்கள் என்று மொழிபெயர்த்தால் என்னவாகும்?

"மேலும் கற்புள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது". என்று நகைச்சுவையாக மாறிவிடும். மூளை கொண்டு சிந்திப்பவர்களுக்கு உண்மை புரிந்துவிடும் அதனால்தான் அல்லாஹ், இதயத்தைக் கொண்டு சிந்திக்குமாறு கெஞ்சுகிறான்.

இந்த மொழிபெயர்ப்பாளர்கள் வல்முஹ்ஸனாத் என்ற பதத்திற்கு எப்படி கணவனுள்ள அல்லது திருமணமான பெண்கள் என்று பொருள் கொண்டார்கள்?

திருமணமாகாத அல்லது கணவனில்லாத பெண்களுக்கு கற்பு இருக்கதென்று முடிவு செய்துவிட்டார்களா?

மேலும் குறிப்பிட்ட இந்த வசனத்தில் எங்குமே திருமணம், திருமணக்கொடை, மஹ்ர், என்ற பொருள்படும் எந்தப் பதங்களும் கிடையாது. ஆனால் ujūrahunna என்ற பதத்தைக் கொண்டுதான் நமது முல்லாக்கள் "திருமணம்”, “கணவன்” “மனைவி” மஹ்ர்." என்றெல்லாம் நீட்டி முழக்கியிருக்கிறார்கள்.

Ujūrahunna என்றால் கூலி, ஊதியம், வெகுமதி என்று பொருள் கொள்ளலாம். நாமாக வலிந்து திணித்தாலொழிய மஹ்ர் என்பதாக பொருள் கொள்ள முடியாது.மஹ்ர்’ என்றால் என்னவென்பது உங்களுக்கே தெரியும்.
“…மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது…” என்ற இந்த அனுமதியைத்தான், ஷியாக்கள் முத்ஆவிற்கான அனுமதியாக கருதுகின்றனர். அவர்கள் கூறும் பொருளில்தான் இந்த வசனம் இருக்கிறதென்பதை சற்று கவனித்தால் உங்களுக்கே புரியும்.

அடிமைபெண்களைத் தவிர மற்றவர்களுக்கு கட்டாயமாக கூலி அல்லது ஊதியத்தை ஒப்பந்தப்படி கொடுத்துவிடவேண்டும். இவர்கள் சுந்திரமான பெண்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடிமைப்பெண்களுக்கு விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் அவர்களுடன் கூடி வாழ்வதற்கு எந்த  வரைமுறையுமில்லை

திருமணபந்தமோ அல்லது எவ்வித வரைமுமுறைகளுமோ இல்லாமல் அடிமைப்பெண்களுடன் கூடுவது விபச்சாரம்தானே என்ற கேள்வி நம்மைப் போலவே அவர்களுக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் பெயரால் அதை பழிப்புக்குரியதல்ல என்று சரிகண்டுவிட்டனர்.

அதே போல முத்ஆவை விபச்சாரம் என்று சொல்வதற்கு தயக்கமாக இருந்ததினால் திருமணம் என்று சொல்லிக் கொண்டனர். அதாவது வழிப்பறிக் கொள்ளைப் பொருட்களை கனீமத் என்று சொல்லிக் கொண்டதைப் போல!

ஆக குர்ஆன் அனுமதிக்கும் பாலியல் துணைகள்,
1. மனைவி
2. அடிமைப் பெண்கள்
3. முத்ஆ மூலம் அடைந்த பெண்கள்

நான் முன்பே சொன்னதுபோல பெரும்பாலான விபச்சாரம் மற்றும் கள்ளத்தொடர்பு பற்றிய குர்ஆன் வசனங்கள் பெண்களை மையப்படுத்தி மட்டுமே பேசுகிறது. இது அல்லாஹ் அல்லது முஹம்மதின் கோணல் புத்தியின் வெளிப்பாடு அல்லது அன்றைய முஹம்மதின் காலப்பெண்கள் விபச்சாரத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சில வசனங்களைப் பார்க்கலாம்
குர்ஆன் 4:15
உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள்.
குர்ஆன் 4:25
….அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்…
குர்ஆன் 60:12
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ,……

விபச்சாரம் பற்றி குர்ஆன் மேலும் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்
17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது.

முத்ஆ, அடிமைப்பெண்கள் என்றெல்லாம் என்று கடையத் திறந்துவிட்டு விபச்சாரத்தைப்பற்றி அல்லாஹ் எதற்காக வருத்தப்படுகிறான் என்பது தெரியவில்லை. பின்வரும் குர்ஆன் வசனத்தை சற்று கவனியுங்கள்.

குர்ஆன் 24:33
…மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருப்பது இந்தக் குர்ஆன் வசனத்தைதான். இவ் வசனத்தின்(24:33) குறிப்பிட்ட இந்தப் பகுதி பொருள் பேதம் தரக் கூடியது. காரணம் அல்லாஹ்வின் தரமற்ற மொழிநடைதான்.

இந்த வசனம் அடிமைப்பெண்களை பலவந்தப்படுத்தி பாலியல்தொழில் செய்யவேண்டம் என்றுதான் சொல்கிறது. இதன் மறுபுறம் எவ்விதமான பலவந்தமுமில்லை எனில் அடிமைப்பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் செய்யலாம் என்றாகிறது. ஆனால் எவ்விதத்திலும் அடிமைப்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யக்கூடாது என்று தடுக்கவில்லை. இந்த வசனத்தைக் கொண்டு அப்படியொரு தடையைக் கூறமுடியாது. குர் ஆனின் தவறான மொழிநடைக்கு இது ஒரு உதாரணம்.

மேலும் அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால்..?
…min(after) ba’di (after)ik'rāhihinna(their compulsion) ghafūrun(Oft-Forgiving,) raḥīmun(Merciful)
பின்பும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
”…And if one force them, then (unto them), after their compulsion, lo! Allah will be Forgiving, Merciful. (Pickthall)
…But if anyone compels them, yet, after such compulsion, is Allah, Oft-Forgiving, Most Merciful (to them). (Yusuf Ali)

அவர்களை வற்புறுத்தினால் மன்னிப்பான், கருணை செய்வான் எனில், விபச்சாரத்திற்காக வற்புத்தலாமா?

இங்கு அல்லாஹ் என்ன சொல்ல வருகிறான்?

ஒரு விதிமுறையைச் சொல்லும் பொழுது அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான் சொல்ல முடியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொன்னால் முஹம்மதின் 'கைலி' கழன்றுவிடும். இதை அறியாதவரா முஹம்மது?

தன்னிடமும் அடிமைகள் இருக்கிறார்கள், புனிதப் போர்கள் வேறு அடிமைகளை வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது. அடிமைவியாபாரம் சொல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கும் பொழுது அதையெல்லாம் எவனாவது விதிமுறைகள் என்றபெயரில் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்வானா?

இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்!

அப்படியானால்...?

அது அப்படித்தான்!


தஜ்ஜால்


Wednesday 10 June 2015

ஏமாற்றுவாதங்கள்!

விடாமுயற்சியைப்பற்றிச்  சொல்லும் பொழுது வழக்கில்,

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

அம்மியை எதற்கு அடிக்க வேண்டும்?

பழமொழி சொன்னால் கேட்க வேண்டும் ஆராயக் கூடாது!

சரி.. சரி... நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்!

இணையத்தில் நாம் என்னதான் விளக்கினாலும், உணர்ச்சி வசப்பட்ட ஒரு சில இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் கண்டும் காணாதவர்களைப் போல இருக்கின்றனர்.

அந்த சிலரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமைப்பற்றித் தெரியாதவர்கள்.  தங்களது சொந்தக் கருத்துக்களையெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் முன்வைத்து நமது ஆவியை(!) எடுப்பவர்கள்.

புத்திசாலித்தனமாக சிந்த்திப்பவர்களோ, தாங்கள் சொல்லும் மூத்திரச் சந்திற்கு வந்தால் மட்டுமே பதில் சொல்வோமென்று அடம்பிடித்து அறைக்கூவல் விடுபவர்கள்.

என்ன நடந்தாலும் சரி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் மட்டும் வாயைத் திறக்கவே மாட்டார்கள்!

இவர்களின் அமைதி(!) நம்மைப் போன்றவர்கள் இணையத்தில் முன்வைக்கும் விமர்சனங்கள், உண்மையிலேயே இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைச் சென்றடைகிறதா? என்று நாமே சற்று குழம்பிப் போகுமளவிற்கு இருக்கிறது.

இவர்களின் அமைதிக்கு  சில காரணங்கள் இருக்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு ஆலிம்கள் பதில் கூறத் துவங்கினால் நாம் பெரிய ஆளாக ஆகிவிடுவோமாம்!

இவைகளுக்கு பொதுவெளியில் பதிலளிக்கத் துவங்கினால் எதிர்க் கருத்துக்கள் மிக எளிதாக கடைநிலை முஸ்லீம்களையும் சென்றடைந்து விடும் என்ற அச்ச உணர்வு அவர்களைத் தடுக்கிறதாம். இது ஒரு முல்லா என்னிடம் கூறிய பதில்.

ஆனால் கேள்விக்கணைகள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.

விளைவு!

அம்மி நகரத் துவங்கியிருக்கிறது.

மாஷா அல்லாஹ்!

பீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிதுபுதிதாக விளங்கங்கள் இணைந்து கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளை தனித் தொகுதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்ஷா அல்லா!


பாவம் அல்லாஹ்!

குர்ஆன் விளக்கமானது(3:128), தெளிவானது(5:15), தெளிவுபடுத்தப்பட்டது(18:54) விவரித்துத் தெளிவாக்கப்பட்டது என்றெல்லாம் அல்லாஹ்(!), தனக்குத்தானே சான்றிதழ்களை வழங்கி கரடியாக கத்துவது எந்த முல்லாக்களின் காதுகளிலும் விழவில்லை! மூடர்கள், குருடர்கள், செவிடர்கள் என்று குர்ஆனில் அல்லாஹ்(!), அழகிய முறையில் வர்ணனை செய்வது இவர்களைத்தான் என்று நினைக்கிறேன்.

நகர்ந்திருக்கும் அம்மியைப்பற்றி சிறிது கவனிக்கலாம்.

குர்ஆன் அறிவியலுடன், வரலாற்றுடன், சமகால நாகரீகத்துடன், மனிதநேயத்துடன் முரண்படுவதுடன் தனக்குத்தானே முரண்படுவதை நாம் அறிவோம். மனிதன் படைக்கப்பட்ட விதத்தை குர்ஆன் கூறும் விதங்கள் அதன் உள்முரண்பாடுகளுக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்று. அதை விதவிதமாக நமது ஆலிம்கள் விளக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களது அறியாமையை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவார்கள். அறியாமை என்று கூறுவதைவிட ஏமாற்றுவாதம் என்று கூறுவது சரி!

பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளில் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக கூறும் TNTJ வின் அதிகாரபூர்வ இணையதளத்திலிலிருந்து...




இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.
இவ்வசனங்களில் (19:67, 76:1) முன்னர் எந்தப் பொருளாகவும் மனிதன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (21:30, 25:54, 32:8, 76:2, 86:6) தண்ணீரால் மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) கருவுற்ற சினைமுட்டையில் இருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (3:59, 18:37, 22:5, 30:20, 35:11) மண்ணால் உங்களைப் படைத்தோம் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (16:4, 18:37, 22:5, 23:13, 23:14, 35:11, 36:77, 40:67, 53:45, 75:37, 76:2, 80:19) மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்படி குர்ஆன் முரண்பட்டுp பேசுவது ஏன் என்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

”கருவுற்ற சினைமுட்டையிலிருந்து” என்ற பீஜேவின் கற்பனையை பலமுறை நாம் விவாதித்திருக்கிறோம் எனவே அதைபற்றி நான் இங்கு விவாதிக்கப் போவதில்லை.  பீஜே என்ன சொல்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.

ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை. எல்லாமே சரியான கருத்து தான் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இடியாப்பம் எனும் உணவைப் பற்றி பேசும்போது
நெல்லில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசியில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
மாவில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசிமாவில் இருந்து தயாரிக்கப்பபட்டது எனவும் கூறலாம்.
தண்ணீர் மற்றும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்.
இதை முரண்பாடு என்று யாரும் கூற மாட்டார்கள். இதில் எந்த ஒன்றையும் பொய் என்று சொல்ல முடியாது.
பீஜேவின் விளக்கத்தை ஆன்லைன் பீஜேவில்தான் படிப்போம் என்பவர்கள் இணைப்பை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.

குர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான் என்பதை அறிந்துதான் இதற்கு இடியாப்பத்தை உதாரணமாக கொடுத்திருக்கிறாரோ என்னவோ?
அல்லாஹ்வே அறிவான்!

ஒரு சமையல்காரரிடம் இடியாப்பத்தை எவ்வாறு செய்கிதீர்கள்? என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாரா?

அதிலும் மிகத்தெளிவாக எல்லோருக்கும் விளங்கும்வகையில் விவரித்திருப்பதாக கூறிக் கொள்ளும் சமையல்காரர் இப்படித்தான் பதிலளிப்பாரா?

பீஜேவின் இடியாப்பத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பீஜே மிகபுத்திசாலித்தனமாக தனது விளக்கத்தில் இடியாப்பத்தின் மிக முக்கிய மூலப்பொருளை தவறாது குறிப்பிட்டு குர்ஆனை முட்டுக் கொடுத்து நிறுத்தப்பார்க்கிறார்.

தேறியதா என்பதுதான் இங்கு கேள்வி!

மனிதனின் படைப்பிற்காக குர் ஆன் பட்டியலிடும் மூலப்பொருட்கள்,

மண்

களிமண்

பிசுபிசுப்பான களிமண்

களிமண்ணின் மூலத்திலிருந்து

தட்டினால் ஓசைதரக்கூடிய களிமண்

நீர்

குதித்துக்குதித்து வெளியாகும் நீர்

விந்து

சொட்டுசொட்டாக ஊற்றப்பட்ட நீரிலிருந்து

எந்தப் பொருளாகவும் இருக்காத நிலையிலிருந்து

ஆகுக

ஓர் ஆத்மாவிலிருந்து..

பீஜேவின் ’இடியாப்ப’ உதாரணத்தை குர்ஆனுடன் பொருத்திப்பாருங்கள் பீஜே, இடியப்பத்தின் மூலம் அல்லாஹ்விற்கு முட்டுக் கொடுத்து நிற்க வைக்க எடுத்திருக்கும் பெருமுயற்சிகள் உங்களுக்கே புரியும்.

நெருப்பு அல்லது அதிக வெப்பத்தில் சுடப்படும்பொழுதுதான் களிமண் ஓசை தரக்கூடையதாக மாற்றமடையும்; எனவே மனிதன் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என்று கூறலாமா?

இடியாப்பம் தண்ணீரால் செய்யப்பட்டது.

குதித்து குதித்து வெளியாகும் நீரிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது

எதுவுமில்லாததிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது.

’குன்’ என்றவுடன் இடியாப்பம் உருவாகிவிட்டது. என்று குர்ஆனுக்கு பீஜே விளக்கம் கொடுக்க வேண்டும்.

இறுதியாக அவர் குறிப்பிட்டிருக்கும் ”என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்” என்ற பதில் இடியாப்பத்தை உருவாக்கியவர் யார் என்ற கேள்விக்கான பதில்!
எனவே பீஜே இங்கும் சறுக்கி விழுகிறார்.

வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.
வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வானம் என்ற சொல் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் பீஜே, மெல்ல நழுவி, இருவகையான வானங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

...இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.
...இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை.



எனவே வானம் என்பது,

வெட்டவெளியாகவும்,

ஏழு அடுக்குகள் கொண்ட வேறொரு அமைப்பாக,

இருவகைப்படும் என்ற அறிய கண்டுபிடிப்பை மனிதகுலத்திற்கு அறிவிக்கிறார். அவர் கூறுவதற்கு தயங்கினாலும், குர்ஆனைப் பொருத்தவரையில் வானம் என்பது திடப்பொருளாலான ஏழு அடுக்குகளைக் கொண்டது.

வானம் என்றால் என்ன?
நீலநிறத்தில் நாம் காண்கிற வானம் என்பது காட்சிப் பிழை என்கிறது அறிவியல். பூமியைச் சூழ்ந்துள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வெளியேரும் அலை நீளம் குறைவான நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நமக்கு பகலில் நீல நிறமாகத் தெரிகிறது. இதில் ஒளிஅலைநீளமும், பார்வைக் கோணமும், நமது விழியின் கிரகிக்கும் தன்மையும் கூடுதல் காரணிகளாக அமைகிறது. இதை நாம் துவக்கப்பள்ளி அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம்.
வானம் நமக்கு நீல நிறமாகத் தெரியும் அதேவேளையில் புவியின் வேறுபகுதிகளில் செந்நிறமாக உதயத்திலும், அந்திவேளையிலும், இரவாக இருளுளிலும் இருக்கிறது.

வானத்தைப்பற்றிய குர்ஆன் மற்றும் முல்லாக்களின் உளறல்களை நாம் முன்பே மிக விரிவாக விவாதித்திருக்கிறோம். குர்ஆன் மட்டுமல்ல பீஜேவும் தனக்குத்தானே எவ்வாறெல்லாம் முரண்படுகிறார் என்பதை இந்த இணைப்பை  சொடுக்கினால் உங்களுக்கே புரியும்.

அறிவுள்ள மனிதர்கள், மூடத்தனமான கருத்துக்களின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பற்று அவர்களை எவ்வாறெல்லாம் சிந்திக்க வைக்கிறதென்பதற்கு பீஜேவின் விளக்கங்கள் சிறந்த உதாரணம்!


தஜ்ஜால்